2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை தமிழ் பிரதேசத்துக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எஸ். புஷ்பராஜா, எஸ். செல்வராஜா, எம்.எல்.துல்கர்னைன், கல்முனை மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம்,
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை மாநகரசபை ஆணையாளர் லியாகத் அலி மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் எனும் நிகழ்ச்சித் திட்டத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 16 கிராமங்களுக்கென 16 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்தார்.

மேற்படி திட்டத்துக்கென, கிழக்கு மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா 6 மில்லியன் ரூபாவினையும், கிழக்கு மாகாண உறுப்பினர் புஷ்பராஜா 3 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பிரிவுகளில் காணப்பட்ட பல பிரச்சினைக்குத் தீர்வுகள் எட்டப்பட்டன.

 


              

 


You May Also Like

  Comments - 0

  • neethan Saturday, 25 February 2012 08:38 PM

    ஏனிந்த பிரிவினை? மாகாணசபை அரச உறுப்பினர் துல்கர்னைன் கலந்துகொள்ள, எதிர்கட்சி உறுப்பினர்கள் ஜவாத்,ஜமீல் கலந்து கொள்ளவில்லை, ஆனால் மாநகர எதிர் கட்சி தலைவர் அமிர்தலிங்கம் பங்கேற்ப்பு, கல்முனை மாநகர மேயர் இல்லை, மேயேரினது ஆளுகைக்குள் தமிழ் பிரிவு வராதா? மாகாணசபை அமைச்சரும், உறுப்பினரும் தமிழ் பிரதேசங்களுக்கு மட்டும் தான் நிதி ஒதுக்குவார்களா? புட்டும் தேங்காய் பூவும் அகராதியில் அழிந்து விட்டதோ?

    Reply : 0       0

    Mohamed Aaeis Sunday, 26 February 2012 06:07 AM

    அமைச்சர் அதாஉல்லாஹ் அடிக்கடி சொல்வார். புட்டுக்கு தேங்காய் பூ போடுவது புட்டை துண்டு துண்டாய் பிரிப்பதற்கு என்பது தெரியுமா?

    Reply : 0       0

    neethan Monday, 27 February 2012 08:57 PM

    ஆம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஊர்களை எல்லாம் அவருக்கே உரிய பாணியில் புட்டை பிரிப்பது போல துண்டு துண்டாக்கி விட்டார். அக்கரைபற்று மாநகர சபை நல்ல உதாரணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .