Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை தமிழ் பிரிவு பிரதேசங்களை புறக்கணித்து வருவதாக, கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.
கல்முனை தமிழ் பகுதிகளுக்கான – பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
"கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் பதவி வகித்த மேயர்கள் தமிழ் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நியாயமாக நடந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் மேயர் மசூர் மௌலானா போன்றவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு செயற்பட்டனர்.
ஆனால், தற்போதை மேயர் சிராஸ் மீராசாஹிப் – கல்முனை தமிழ் பிரதேசங்களை அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது புறக்கணித்து வருகின்றார்.
உதாரணமாக, கல்முனை பிரதேசத்தில் சுமார் 06 லட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியாயின் கல்முனைப் பிரதேசத்தில் மூன்றிலொரு பங்கினராக வசிக்கும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு 02 லட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், 75 ஆயிரம் ரூபாயளவான மின் விளக்குகள் கூட – தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதை வைத்துக் கொண்டு, நான் முஸ்லிம் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகள் மேற்கொள்வதை எதிர்ப்பதாக அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளைப் போன்று, தமிழ் பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி பங்கினை வழங்க வேண்டும் என்றே கூறுகின்றேன். அடுத்தவரின் பங்கினைத் தட்டிப் பறிக்கவும் கூடாது, நமது பங்கினை விட்டுக் கொடுக்கவும் முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
மேயர் சிராஸ் - இவ்வாறு தொடர்ந்து தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவாரேயானால், இனி மாநக ரசபையில் அவருக்கு – நாம் எவ்விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கமாட்டோம்" என்றார்.
riswan Saturday, 25 February 2012 10:13 PM
நீங்கள் எங்குதான் ஒத்துழைப்பு வழங்குகிறீர்கள்....!!!
Reply : 0 0
kulathooran Saturday, 25 February 2012 10:39 PM
சிராஸ் பதவி ஏற்று இன்னும் ஒருவருடம் முடியாத நிலைமையில் உங்கள் குற்றச்சாட்டு. சற்று பொறுங்கள், அவர் தனது பிறந்த இடத்தையும், வாக்களித்தவர்களையும் திருப்தி செய்து மற்ற பகுதிகளுக்கு நகர்வார்.......? மாநகர் பெயர் எழுதுவதில் தென் எல்லை கேட் வே இன்னும் அவர் கண்ணில் படவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.
Reply : 0 0
pottuvilan Sunday, 26 February 2012 02:50 AM
மூன்றில் ஒருபகுதி என்றால் எத்தனை தெரு மின்விளக்குகள் இருகின்றன? தொடங்கிட்டாங்கையா அவங்கட உரிமைக்குரலை? எடுத்ததுக்கெல்லாம்..... உரிமை உரிமை.
Reply : 0 0
செம்பகம் Monday, 27 February 2012 05:08 PM
மாநகர முதல்வராகிவிட்டா தான் சார்ந்த ஊர் என்பது மறந்து, மாநகரத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து சேவை புரியவேண்டும்.
Reply : 0 0
neethiudayaan Monday, 27 February 2012 06:17 PM
மாநகர சபையின் முக்கிய பணிகளில் ஒன்று தெருமின் விளக்குகளை பராமரிப்பதுதான். பழுதடைந்தால் திருத்துவதிலும் இன விகிதாசாரமா? என்ன பகிடி இது?
Reply : 0 0
neethiudayaan Monday, 27 February 2012 06:19 PM
அமிர்தலிங்கம் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று மார் தட்டி பேசுகிரார் இப்படி ஒரு பதவியா மாநகர சபையில்? இல்லையே… இவருக்கு இப்பதவியை வழங்கியது யார்?. என்ன கொடும சரவணா?
Reply : 0 0
neethiudayaan Monday, 27 February 2012 08:46 PM
அமிர்தலிங்கம் அவர்கள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களை போற்றினார் மேடைகளில். இன மத பிரதேச பாகுபாடற்றவர் என்றார். இப்போ என்னப்பா நடந்தது?
Reply : 0 0
love nation Monday, 27 February 2012 08:59 PM
இனத்துவேசத்தை கிளப்புவதே இந்த அரசியல்வாதிகள்தான். பிரதான பாதை மின் கம்பங்கள் உள்ளவற்றிற்கு விளக்குகள் போட்டதற்கும் இப்படி கிளப்புவது.
Reply : 0 0
hathee Wednesday, 29 February 2012 02:10 PM
உங்களுக்கு நாட்டை தந்தாலும் திருப்திப்பட மாட்டீர்கள். இதை உங்களின் சபைக்கூட்டத்தில் கூறினீர்களா. நாவிதன் வெளியில் மற்றும் காரைதீவில் உள்ள பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நீங்கள் நீதியாக நடந்துகொள்கிரீர்களா. கேட்பதுபோல கொடுக்கவும் தெரியனும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago