2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை மாநகர சபையினால் புதிய சாப்பு சட்டம் அறிமுகம்

Super User   / 2012 பெப்ரவரி 25 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாப்பு சட்டம் கல்முனை மாநகர பிரேசங்களில் நேற்;று வெள்ளிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கமைவாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் கல்முனை நகர் சுற்று வட்டம் வரையான பகுதி, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் கல்முனை நகர் சுற்று வட்டத்திற்கு அப்பாலுள்ள தமிழ் பிரதேசங்களிலுள்ள கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதேவேளை, இப்பிரதேசங்களிலுள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கல்முனை மாநகர சபை தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே சாப்பு சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை அறிமுகப்பட்டுத்தப்பட்டது.

இதேவேளை, ஒரு மாநகர சபை பிரதேசத்திற்குள் இரு வகையான நாட்களில் சாப்பு சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • tharumi Sunday, 26 February 2012 12:44 AM

    தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுபவர்களுக்கு சமர்ப்பணம்.

    Reply : 0       0

    sopnam Sunday, 26 February 2012 02:16 AM

    நீதி அமைச்சரே...
    சபாஷ் சரியான நீதி
    இதுபோல் மட்டக்களப்பு நகரில் ஞாயிற்றுக் கிழமைகளில் முஸ்லிம் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுமா?....

    Reply : 0       0

    pottuvilan Sunday, 26 February 2012 02:44 AM

    வடக்கில் எப்படி?

    Reply : 0       0

    hameed Sunday, 26 February 2012 05:00 AM

    பிழையான முன்னுதாரணம் பிரிவினைக்கும் தமிழ் முஸ்லிம் ஒருமைக்கும் விடுக்கப்பட்ட சவால்.

    Reply : 0       0

    raj Sunday, 26 February 2012 05:27 AM

    இனரீதியாக பிரிப்பதை கல்முனையில் அரசியல் தலைவர்கள் சிறப்பாக தொடர்கின்றனர். இரண்டு டி. எஸ். ஆபீஸ் இரண்டு சுகாதார அலுவலகம். இப்ப இரண்டு விதமான சாப்பு சட்டம் . வாழ்க உங்கள் அரசியல் நாடகம் .

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 26 February 2012 06:02 AM

    சரியான தீர்ப்பு .............ஹி...ஹி .....ஹி தமிழ் முஸ்லிம் ஒற்றுமை.

    Reply : 0       0

    Shaby Sunday, 26 February 2012 02:02 PM

    நீதியமைச்சரின் நீதியான தீர்ப்பு. அவரால் முடிந்தது. மட்டக்களப்பு, வட மாகாணம் என்றெல்லாம் பேசி நீதியமச்சரை சங்கடத்திற்கு உள்ளாக்காதிங்கப்பா...

    Reply : 0       0

    riswan Sunday, 26 February 2012 04:52 PM

    முன்மாதிரியான நடவடிக்கை.

    Reply : 0       0

    ummpa Sunday, 26 February 2012 06:46 PM

    மின்சார, தொலைபேசி வயர்களை பார்க்கும்போது இன்னமும் 40 வருடங்கள் பின்னோக்கி கல்முனை நகரம். உரியவர்கள் இதனை கவனத்தில் எடுக்கவேண்டாமா?

    Reply : 0       0

    easternbrother Sunday, 26 February 2012 09:02 PM

    யாருக்கு எப்ப எப்ப கடை திறக்கனுமோ அப்பப்ப திறந்து வியாபாரம் செய்வார்கள்........அதுக்கு என்ன சட்டம் ??

    Reply : 0       0

    செம்பகம் Monday, 27 February 2012 02:57 PM

    அப்துல் அஸிஸ் அவர்களே சாய்ந்தமருதிலும் கடைகள் திறக்கப்ட்டதனை ஏன் உங்கள் கண்கள் பார்க்க மருத்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தேனீர் கடைகள், தேனிர் கடைகளுக்கு வேறு எந்த தினத்தில் சாப்புச் சட்டமிடுவது?

    Reply : 0       0

    செம்பகம் Monday, 27 February 2012 03:00 PM

    நீதி அமைச்சர் என்றவகையிலும் பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் இரு சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் சட்டம் என்றால் ஒன்றுதான் தாய்க்கு வேறு பிள்ளைக்கு வேறு என்றில்லை என்பதை இனியாவது உணர்வீர்களா?

    Reply : 0       0

    THEE RAN MOHAMED Monday, 27 February 2012 09:41 PM

    இதனால் தமிழ், முஸ்லிம் பொதுமக்களுக்கு மட்டும் அன்றி வர்த்த்கர்களுக்கு நன்மைதான், காலப் போக்கில் சரியாகிவிடும்.

    Reply : 0       0

    aaayuthan Wednesday, 29 February 2012 05:10 PM

    eppadiyo velli kilama leevu vantha sari

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .