2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரு நாட்கள் சாப்பு சட்டத்தை அமுல்படுத்துவதால் சமூகங்களிடையே பிளவுகள் ஏற்படும்: கல்முனை வர்த்தக சம்மே

Super User   / 2012 பெப்ரவரி 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனையில் மாநகரத்தில் இரு நாட்களில் சாப்பு சட்டததை அமுல்படுத்த  தீர்மானித்திருப்பது இரு சமூகங்களை தொடர்ந்தும் பிரித்துவைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என கல்முனை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது இன ஐக்கியத்திற்கும் ஊறுவிளைவிப்பதாக உள்ளது எனவும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கல்முனையில் மாநகரத்தில் இரு நாட்களில் சாப்பு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில்  கல்முனை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.ஏ. கரீம், தவிசாளர் யூ.எல்.எம். பஸீர் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துக்கப்பட்டுள்ளதாவது,

"கல்முனை மாநகரில் வர்த்தகம் புரிந்து வந்த சகல வர்த்தகர்களும் பன்னெடுங்காலமாக கல்முனைப் பகுதியின் நிலைமையை புரிந்து ஒற்றுமையை பேணி பாதுகாத்து வெள்ளிக்கிழமையினை விடுமுறை தினமாக ஏற்று சாப்புச்சட்ட ஒழுங்குவிதிகளை நன்கு மதித்து செயற்பட்டு வந்துள்ளனர்.

இவ்வாறிருக்க ஒரு சில வர்த்தகர்களின் தனிப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் துணைபோயிருப்பது மிகவும் வேதனைக்குரியதும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமுமாகும்.
 
சாப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் வர்த்தகர்களுடன் கலந்துரையாடியுள்ளது. இக்கூட்டத்திற்கு கல்முனை வர்த்தக பிரதிநிதிகளை அழைக்கவில்லை.

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் தலைநகரம் என நாமம் சூட்டப்பட்ட பட்டினத்தின் முஸ்லிம் வர்த்தகர்கள் அழைக்கப்படாமல் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது எந்தவகையில் நியாயமாகும்?
 
நீண்ட காலமாக கல்முனை வர்த்தக சம்மேளனம், கல்முனை வர்த்தக சங்கம், ஐக்கிய வணிகர் அமைப்பு (தமிழ் வர்த்தகர் சங்கம்), சாய்ந்தமருது மற்றும் மருதமுனை வர்த்தக சங்கங்களின் தலைவர், செயலாளர்களை உள்ளடக்கியதாக கல்முனை மாநகர சபையில் செயற்பட்டு வரும் அரச தனியார் செயற்குழு கூட்டத்தில் பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் நிமித்தமே அரசாங்க விதிகள், நிதி நடைமுறைகளை  பேணியதாக 19 கடைகளுக்கும் திறந்த கேள்வி பத்திரம் கோரப்பட்டது

ஆகக்கூடிய கேள்வி தொகை சமர்ப்பித்தவர்களுக்கு கடைகளை வழங்குவதற்கு கேள்வி  சபை தீர்மானித்து உறுப்பினர்களின் மாதாந்த சபை அமர்வின் போது உறுதிப்படுத்தப்பட்டு திறப்புகள் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

ஆனால், இறுதி நேரத்தில் தீர்மானத்தினை கைவிடக்கோரியிருப்பது எந்த வகையில் நியாயமாகும். பகிரங்கமாக தினசரி பத்திரிகையிலும் விளம்பர பலகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்ட போது தீர்மானத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தவர்கள் எங்கிருந்தார்கள்?
 
தமிழ்களுக்கு 5 கடைகளும் முஸ்லிம்களுக்கு மிகுதி கடைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைமைகள் கையெழுத்திட்டு மாநகர சபைக்கு எழுத்து மூலம் வழங்குவார்களா? இவ்வாறு, கல்முனையில் மாத்திரம் இன ரீதியாக நோக்கப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற நகரங்களில் முஸ்லிம்களின் பங்குகள் என்ன என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு எது என்பதை தெளிவுபடுத்துமா?

அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கல்முனைக்கு வெளியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை உறுதிப்படுத்துவாரா?

மேற்படி விடயங்களில் இரண்டு கட்சி தலைவர்களும் தீர்க்கதரிசனமானதும், தீர்க்கமானதுமான முடிவினை எடுக்க வேண்டும் என வர்த்தக சம்மேளனம் பெரிதும் விரும்புகின்றது.
 
மிகவும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்முனை மாநகர அபிவிருத்தித் திட்டமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணத்தோடு எதுவித முன்னெடுப்புக்களுமின்றி கிடப்பில் கிடப்பதானது முஸ்லிம்களின் வர்த்தக தலைநகரும் தென் கிழக்கின் முகவெற்றிலையுமான கல்முனையினை வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணிக்கும் செயலாகவே எமது சம்மேளனம் பார்க்கின்றது.

கல்முனைக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் வருகையின் மூலம் சுமார் 350 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையிலான அபிவிருத்திகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அரசியல் குத்துவெட்டுக் காரணமாக அதனை தடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்முனையின் அபிவிருத்தியை மேலும் பின்கொண்டு செல்லவே வழிவகுத்துள்ளது. எனவே இது விடயத்தில் இனிவரும் காலங்களிலாவது பொருத்தமான முடிவுகளை எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்"


You May Also Like

  Comments - 0

  • ummpa Monday, 27 February 2012 02:17 PM

    இரு நாட்கள் சாப்பு சட்டத்தை அமுல்படுத்துவதால் சமூகங்களிடையே பிளவுகள் ஏற்படும் என்பது நடக்காத விடயம். முஸ்லிம்கள் வெள்ளிகிழமை காலை பூட்டி மாலை திறந்து கொள்வது சிறப்பு, தமிழர்கள் விரும்பினால் திறக்கட்டும். இதை பெரிதாக்கிகொண்டு இருப்பதை விட்டு விட்டு மற்ற நல்ல விடயங்களை பாருங்கள்.

    Reply : 0       0

    meenavan Tuesday, 28 February 2012 11:36 PM

    @pasha கல்முனை நகர் மட்டுமல்ல நம்மவர் பெரும்பான்மையாக வாழும் இடமெல்லாம் இதே நிலைமை என்பதை மறுக்க முடியாது, இவர்களை நம்பியே நிதி நிறுவனங்களும் கிளைகளை திறக்கிறது. வங்கி அலுவல்களை ஆறுதலாக பார்பதற்கும் இந்த நாளே அவர்களுக்கு உதவுகிறது அவர்களுக்கு சற்று இரக்கம் காட்டுங்களேன்.

    Reply : 0       0

    pasha Tuesday, 28 February 2012 07:02 PM

    கல்முனை நகர் இப்போதும் ஆக கூடிய வட்டி வங்கிகளால் நிரம்பியே காணபடுகிறது. இங்கு நடக்கின்ற வியாபாரங்கள் அதனையும் இந்த வட்டி வங்கிகளை நம்பியே நடகின்றன. வெள்ளிகிழமை கடை மூடுவதால் மட்டும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ ஆகி விடாது. இஸ்லாமும் ஜம்மா நேரத்தில் மட்டுமே வியாபாரத்தை கை விட சொல்லி உள்ளது. முழு வெள்ளி கிழமையுமல்ல. இந்த இடத்தில அரச சட்டத்தை அமுல்படுத்துவது தான் சிறப்பு.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 28 February 2012 04:35 PM

    யாரு இருந்தா என்பது பிரசினை இல்லை. நமக்கு தேவ அபிவிருத்தி.

    Reply : 0       0

    gnani Tuesday, 28 February 2012 03:28 AM

    கல்முனை நகர் ஒரு காலத்தில் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது என்று சொல்வதை விட இந்திய செட்டிகள்(வட்டிக்கு பணம் கொடுப்போர்) ஆதிக்கத்தில் இருந்தது என்று சொல்லலாம்.

    Reply : 0       0

    riswan Tuesday, 28 February 2012 12:24 AM

    Mr. Rajeev. இது ஒரு ஆச்சரியமே இல்லை. உலகம் அழியும் நாளில் முஸ்லிம்கள் மிக அதிகமாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்காது.

    Reply : 0       0

    Kethis Monday, 27 February 2012 08:25 PM

    யாப்புச் சட்டமானது கடை ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கானது. அவரவர்களுக்கு விருப்பமான தேவையான ஒரு தினத்தில் கடையை மூட அனுமதிப்பதால் எங்கே சமூகங்களுக்கிடையிலான பிளவு வரப்போகிறது? இத்தீர்மானம் புத்திசாலித்தனமானது. உட்கட்சி அரசியலுக்காக அதை எதிர்க்க வேண்டாம்.

    Reply : 0       0

    S.H.M.Fowse Monday, 27 February 2012 08:18 PM

    இரு நாட்கள் சாப்பு சட்டத்தை அமுல்படுத்துவதால் சமூகங்களிடையே பிளவுகள் ஏற்படும் உண்மை. இதை உணராத புத்தி ஜீவிகள் இருக்கத்தான் செய்கின்றகள். ஏன் ஏன் ஏன் ஏன் அரசியல் அரசியல்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Monday, 27 February 2012 04:52 PM

    இது இரண்டு நபர்களின் அறிக்கை போல் விளங்க வில்லை .பல பேர் சார்ந்து வந்து இருக்குறது. ஒன்னு சொல்றன் ஆளுக்காள் இப்படி சொல்லிடு இருந்த யாரும் அபிவிருத்தி கனி சாப்பிட முடியாது.

    Reply : 0       0

    rajeev Monday, 27 February 2012 03:00 PM

    கல்முனை நகரம் ஒரு காலத்தில் தமிழர்களின் நகரமாக இருந்ததை இங்கு கருத்துச் சொல்பவர்களுக்கு தெரியாதுபோல் தெரிகின்றது. நன்றி மறத்தல் நன்றன்று.

    ரஜீவ்

    Reply : 0       0

    செம்பகம் Monday, 27 February 2012 02:51 PM

    இதை வைத்து சில அரசியல்வாதிகள் அரசியலாபம் தேடுகின்றனர். ஊடகவியாளர் சிலரை அழைத்து சில பம்மாத்து வார்த்தைகள் பேசுகின்றனர்.

    Reply : 0       0

    riswan Monday, 27 February 2012 12:32 AM

    மிக சரியான அறிக்கை. தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விகிதாசாரத்தை பேணி இவ்வாறு மற்றைய நகரங்களில் இடம் கொடுக்கப் போவதில்லை.

    Reply : 0       0

    km.rafi Monday, 27 February 2012 06:18 AM

    அறிக்கைக்கு நன்றி............பணிகள் தொடரட்டும்.............

    Reply : 0       0

    mim.nawas Monday, 27 February 2012 06:08 AM

    தமிழ் பேசும் சமூகமான நாம் நமது முரண்பாடுகளை பேசி தீர்த்து கொள்ள முடியும். முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கல்முனையில் தமிழ் மக்களாகிய நாம் சற்று விட்டு கொடுத்தால் நமக்கு என்னதான் குறைந்து விடபோகிறது ............

    Reply : 0       0

    Shaby Monday, 27 February 2012 04:41 AM

    முஸ்லிம் தனி அலகின் தலை நகரம், தென் கிழக்கின் முகவெற்றிலை என்றெல்லாம் தேர்தல் காலங்களில் வீராப்பு பேசுவது வாக்கு வேட்டைக்கே! இனியாவது நம்மவர்கள் புரிந்து கொள்வார்களா? அறிக்கை விட்டவர்களையும் சேர்த்துத்தான்....

    Reply : 0       0

    mim.nawas Monday, 27 February 2012 04:33 AM

    கல்முனை மாநகரை அபிவிருத்தி செய்வதற்கு இனிமேலாவது முஸ்லிம் காங்கரஸ் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?

    Reply : 0       0

    jes Monday, 27 February 2012 04:22 AM

    கல்முனையில் சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்திக்கு நாம் நல்லதொரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். நமக்கு எதுவும் குறைந்து போகாது. முஸ்லிம் சமூகம் நல்லாட்சி செய்யவேண்டும். அதை விட்டு பொக்கட்டை நிரப்ப வீராப்பு பேச வேண்டாம்.

    Reply : 0       0

    meenavan Monday, 27 February 2012 04:14 AM

    நீங்கள் அறிக்கை விடுகிறீர்கள். ஆனால் உங்கள் சகோதர்களில் சிலரும் சில்லறை கடைகளை திறந்து வியாபாரம் பண்ணியதை அறிவீர்களா? நமக்குள்ளேயே புல்லுருவிகளை வைத்துகொண்டு ஏன் மற்றவர்களை நொந்து கொள்ளவேணும்? நம்மவருக்கு ஏழு நாளும் கடைதிறந்து பணம் சேருமெனில் அதையே செய்யும் நிலைமை உள்ளதும் குறிப்பிடதக்கது.

    Reply : 0       0

    mohamed Monday, 27 February 2012 03:29 AM

    கல்முனை பற்றி வந்த செய்திகளில் இதுதான் மிக நடுநிலமையனது.

    Reply : 0       0

    Arafath Monday, 27 February 2012 01:23 AM

    மிகவும் பொருத்தமான அறிக்கை ....கட்டாயம் SLMC தலைவர் வாசிக்க வேண்டும் ....வர்த்தக சங்கங்களுக்கு உயிரூடிய அமைப்புக்கு நன்றிகள் பல....சபாஸ்...

    Reply : 0       0

    kulathooran Monday, 27 February 2012 12:50 AM

    கல்முனை நகர முஸ்லிம் வர்த்தக சங்கபிரதிநிதிகள் அழைக்கபடாவிடினும் கல்முனை பசார் பள்ளி தலைவரும் வர்த்தகருமான மாகாணசபை உறுப்பினர் ஜவாத் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாரே. அவருக்கு விஷயங்கள் புரியாதா? காங்கிரஸ் ஆட்சி கல்முனையில் இருக்கும் வரை கல்முனையில் அபிவிருத்தி என்பது எட்டாக்கனி என்பது கசப்பான உண்மை, காங்கிரஸ் போராளிகள் என்று பீற்றி கொள்வோர் இதை ஏற்றுகொள்ளவும் மாட்டார்கள்.

    Reply : 0       0

    riswan Monday, 27 February 2012 12:33 AM

    மிக சரியான அறிக்கை. தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விகிதாசாரத்தை பேணி இவ்வாறு மற்றைய நகரங்களில் இடம் கொடுக்கப்போவதில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .