Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும் எந்தவித பாகுபாடுடின்றி சரிசமமாக அபிவிருத்தி செய்யப்படும் என தொலைத்தொடர்பு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி திட்டங்களை பாகுபாடுடின்றி இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர், மகாஒயா பிரதேச சபையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் மகாஒயா, அரங்குவ மற்றும் அரந்தலாவ ஆகிய பிரதேசங்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்பு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலப்பிட்டிய, சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிரியானி அமரசிங்க, நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முப்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் என பலர் அண்மையில் விஜமொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்.
2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில்; நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
neethan Monday, 27 February 2012 10:55 PM
அனைத்து பிரதேசங்கள் என குறிப்பிட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு இடங்களும் பெருன்பான்மை மொழி பேசும் மக்கள் வாழும் இடமே தெரிவு செய்யப்பட்டுளதை அறியமுடிகிறது,அப்படி எனின் அமைச்சரின் கூற்று......?
Reply : 0 0
சிறாஜ் Monday, 27 February 2012 10:56 PM
நடந்தால் சரிதான் எல்லாரிடமும் வேலைகளைக் கொடுத்து பொக்கட் நிரப்பாமல், வேலையை வேலைய செய்யும் நபர்களிடம் கொடுத்து செய்ய வேண்டும்.
Reply : 0 0
Priya Tuesday, 28 February 2012 04:19 AM
நல்லது நடக்கும் என நம்புவோம்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 28 February 2012 04:37 PM
நல்லது ................வாழ்த்துக்கள்
Reply : 0 0
ithrees Wednesday, 29 February 2012 06:41 AM
பார்ப்பம் ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago