Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தின் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அத்துமீறிக் குறியேறியுள்ளவர்களை அகற்றவுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் இன்று தெரிவித்தார்.
குறித்த இடத்தில் சிறுவர் பூங்காவொன்றினை அமைப்பதற்கு பிரதேச சபையின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 11ஆவது மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர் நசீர்,
"அட்டாளைச்சேனை 15 மற்றும் 16 ஆம் பிரிவுகளின் ஆற்றங்கரையோரத்தில் அத்துமீறிக் குறியேறியுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த இடங்களில் முன்பு குடியேறியதாக கூறப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு – வோறொரு இடத்தில் குடியிருப்பினை அமைத்துக் கொள்வதற்காக கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த பணத்தொகையினைப் பெற்றுக் கொண்டவர்களில் சிலரே – தற்போது ஆற்றங்கரையோரத்தில் மீண்டும் அத்துமீறிக் குறியேறியுள்ளதாக அறிய முடிகிறது.
அவ்வாறானவர்களை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் அங்கிருந்து வெளியேற்றி விட்டு, அவ்விடத்தில் சிறந்ததொரு சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு எண்ணியுள்ளேன். இதற்கு சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை" என்றார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.எம். பாரீன் உரையாற்றுகையில்:
"சின்னப்பாலமுனை கடற்கரை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள வீதியானது கடற்றொழிலாளர்களுக்கு மிகவும் பிரயோசமாகவுள்ளது. அதேவேளை, பாலமுனை பிரதேசத்திலுள்ள நூலகமும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இவைகளை மேற்கொண்ட தவிசாளருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளை, அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் போது – எதிரணியினருக்கும் நேர்மையான முறையில் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும்" என்றார்.
பிரதி தவிசாளர் எம்.ஏ.அன்சில் உரையாற்றும் போது:
"ஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் பாரிய மண்ணரிப்புக்குக் காரணமான துறைமுக அதிகார சபையினருக்கும், அப்பணியினை மேற்கொள்வோருக்கும் எதிராக அடிப்படை உரிமை மீறல் வழங்கொன்றினைத் தாக்கல் செய்வதாகவும், அந்த வழங்குக்கான செலவினை அட்டாளைச்சேனை பிரதேச சபையே பொறுப்பெடுப்பது எனவும் - கடந்த அமர்வொன்றில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு – சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் உரிய கௌரவத்தினை வழங்க வேண்டும். பிரதேச சபையின் ஊழியர்கள் தமது பணியில் தவறுகள் விடும் போது – அவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கான அத்தனை உரிமையும் சபை உறுப்பினர்களுக்கு உள்ளன" என்றார்.
இந்த அமர்வில், பிரதேச சபை உறுப்பினர்களான – எஸ்.எல். முனாஸ். ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, ரி. ஆப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
pasha Tuesday, 28 February 2012 06:50 PM
மக்களை நினைத்தபடி அகற்ற முடியாது மாண்பு மிகு மாகாண அமைச்சரின் ஒப்புதல் தேவை
Reply : 0 0
சிறாஜ் Wednesday, 29 February 2012 02:53 AM
மான்புமிகு என்று சொல்வது யாருக்கு என்பதனை முதல்ல அறிந்திருக்க வேண்டும்.
Reply : 0 0
sana Thursday, 08 March 2012 09:07 PM
நீங்க இப்படியே பாத்துகொண்டு இரிங்க. என்குட மினிஸ்டர் நம்முட ஆறில சீப்லன் இறக்கபோரராம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago