2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஹசன் அலியின் வேலைத்திட்ட முன்மொழிவுகள் அமைச்சர் பஷிலினால் நிராகரிப்பு

Super User   / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்காளி கட்சிகளில் ஒன்றாக அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலியினால் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹசனலியினால் சமர்ப்பிக்கப்பட்ட 9 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நிராகரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி ஹசனலியின் சகோதரரும், பிரத்தியேக செயலாளரும், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான எம்.ரி. ஜப்பார் அலி - ஹசனலியின் அபிவிருத்தி வேலைத்திட்ட முன்மொழிவுகள் குறித்து பேசுவதற்கு ஆரம்பித்த போது – பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அதை நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொத்துவில் தொகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலியின் வேலைத்திட்ட முன்மொழிவுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பி.எச்.பியசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அக்கட்சியின் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், மசூர் சின்னலெப்பை மற்றும் ஏ.எம்.மஜீட் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். (படங்கள்: அமைச்சின் ஊடக பிரிவு)


You May Also Like

  Comments - 0

  • கல்முனை குடி மகன் Wednesday, 29 February 2012 01:37 AM

    ஆட்டம் முடியும் நேரம்...... வெறும் நாலைந்து பேரின் சுய நலனுக்காக அரசோடு சங்கமித்த முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கும் மிக சிறந்த மரியாதை...

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 29 February 2012 01:39 AM

    ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இருந்து பல ஏமாற்றங்களை மட்டும்தான் பெற்றுள்ளதே தவிர மக்களுக்கு சேவை செய்ய எந்த ஒதுக்கீடுகளும் முஸ்லீம்காங்கிரசுக்கு கொடுக்கப்படுவதாக இல்லை.

    Reply : 0       0

    kulathooran Wednesday, 29 February 2012 02:54 AM

    முஸ்லிம் மக்களின் உரிமையை விட முக்கியமானது, தங்களது கதிரைகளை தக்க வைப்பது முக்கியம், அதில் மு.கா. வுக்கோ தே.கா.வுக்கோ வேறுபாடுகள் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

    Reply : 0       0

    rajew Wednesday, 29 February 2012 03:14 AM

    இது ஹசன் அலி, ஜப்பார் அலி சிந்தனை ..........மக்களுக்கு சென்றடைய மாட்டாது. நன்றி பசில். ராஜபக்ச நிந்தவூர் மக்களுக்கு நன்றாஹி தெரியும், இந்த கூட்டு அலிகல் பற்றி.

    Reply : 0       0

    meenavan Wednesday, 29 February 2012 03:28 AM

    தேசிய பட்டியல் எம்.பி.அவர்களே இன்னுமா தேவை இந்த பதவி?

    Reply : 0       0

    Shaby Wednesday, 29 February 2012 04:35 AM

    இது மட்டுமில்ல இன்னும் நிறைய நடக்கும்

    Reply : 0       0

    zeefa Wednesday, 29 February 2012 11:19 PM

    முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கின்றதா ஆச்சரியமாக இருக்கிறது? பாவம் எமது கட்சியின் நிலை? வாருங்கள் எமது கிழக்கின் தலைவர் அதா உல்லாவிடம் போவோம்.

    Reply : 0       0

    meenavan Thursday, 01 March 2012 02:02 AM

    @zeefa நீங்கள் கூறும் கிழக்கின் தலைவரது ஊர் ஆசுபத்திரியிலும் மோசடியாம் ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை என்று மிரர் செய்தி உள்ளதே இந்நிலையில் என்ன செய்யலாம்? சட்டியில் இருந்து அடுப்பினுள் விழுந்த நிலை வருமே......?

    Reply : 0       0

    niyas Thursday, 01 March 2012 02:55 AM

    அவமானமோ அவமானம் கட்சி செயலாளர்

    Reply : 0       0

    niyas Sunday, 04 March 2012 04:34 AM

    கிணறு ஒன்று இருந்தால் விழலாம். பாழ் கிணறு அல்ல நிறைந்த கிணறு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .