2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் கல்ஓயா பாலத்திற்கு அருகிலிருந்து அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டதாக அம்பாறை நகரப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நகர் கார்மீக பிரதேசத்தைச் சேர்ந்த செங்கல் உற்பத்தி செய்யும் வாடியில் தொழில் புரியும் 2 பிள்ளைகளின் தந்தையான  தரங்க (வயது 29) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியாகியும் மேற்படி நபர் வீடு திரும்பாததைக் கண்டு இன்று காலையில் உறவினர்கள் இவரைத் தேடிச்சென்றபோதே அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அம்பாறை நகரப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .