Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 01 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் டெங்குநுளம்புகள் பெருகும் வகையில் வீட்டுச்சூழலை
வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தலா 500 ரூபா படி 1,500 ரூபாவை தண்டமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இந்த 3 பேருக்கும் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
டெங்குநுளம்புகளை ஒழிக்கும் சுகாதார அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 20ஆம் திகதி திருக்கோவில் பிரதேச பொதுசுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து தம்பிலுவில் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வீட்டுச்சூழலை டெங்குநுளம்புகள் பெருகும் வகையில் அசுத்தமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த 3 பேரும் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட இந்த 3 பேரும் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago