2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 01 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர்  நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே 2,000 ரூபா தண்டம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய மேற்படி நபர்  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் மதுபோதையில் பொதுவிடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .