2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டிச் சங்கங்களின் நிர்வாகிகளுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 02 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, கல்முனைத்தமிழ்ப்பிரிவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட  முச்சக்கரவண்டிச் சங்கங்களின் நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வுக்  கூட்டம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

முச்சக்கரவண்டிச் சங்கங்களின் உறுப்பினர்களினுடைய சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்ட அதேவேளை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவர்களது பிரச்சினைகளை  தீர்த்து வைப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.ஈ.ஜே.பி. நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரிவு ரீதியான பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 03 March 2012 09:02 PM

    அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதுடன்,முச்சக்கர வண்டி பிரயாணிகளிடம் அறவிடும் கட்டணங்களிலும் ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவது நல்லது, குறிப்பாக மீட்டர் பொருத்திய வண்டிகளை அறிமுகபடுத்துவது வரவேற்க்க தக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .