2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அபிவிருத்திகளை விட மேலதிகமான எதனையும் எதிர்க்கட்

Super User   / 2012 மார்ச் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாநகர சபையில் எதிர்க்கட்சி தலைவர் என ஒரு பதவி கிடையாது இந்நிலையில் கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் என காட்டிக் கொள்ளும் ஏ. அமிர்தலிங்கத்திற்கு ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விட மேலதிகமான எதனையும் வழங்க முடியாது என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

"தன் ஊடாகவே தமிழ் பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என அமிர்தலிங்கம் நினைக்கிறார். அது போன்று சகல அபிவிருத்தி வேலைகளை அவர் மூலமாக மாத்திரம் செய்ய முடியாது. என்னை பொறுத்தவரை சகல மாநகர சபை உறுப்பினர்களும் சமமானவர்களே. எனவே சகல உறுப்பினர்கள் மூலமாகவும் அபிவிருத்தி பணிகள் இடம்பெறம்" என கல்முனை மேயர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளில் தமிழ் பிரதேசங்கள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் புறக்கணிக்கப்படுகிறது என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.அமிர்தலிங்கம் தமிழ் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது கல்முனை மேயராகிய என்னால் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக மிகவும் அபாண்டபான குற்றச்சாட்டினை சுமத்தியிருப்பதானது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

எனென்றால் நான் இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகளற்ற ஒரு நாகரிகமான அரசியல்வாதியாகவே என்னை நான் காண விரும்புகின்றேன். இவ்வாறு தான் எனது சகல செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு அமிர்தலிங்கம் அவர்களே சாட்சியாக உள்ளார்.

அவரே பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது "மேயர் இன, மத மற்றும் பிரதேச வேறுபாடுகள் அற்றவர், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்து செயற்படும் மேயரை இந்த கல்முனை மாநகரம் பெற்றிருப்பதை இட்டு நான் சந்தோஷப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதும் அமிர்தலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  நான் மேயராக பதவியேற்ற குறுகிய காலத்தினுள் ஏற்பட்ட வெள்ள அனர்த்த வேளைகளில் முதல் விஜயமாக தமிழ் பிரதேசங்களாகிய நீலாவணை, பாண்டிருப்பு, மணச்சேனை, கல்முனை தமிழ் பிரிவு போன்ற பிரதேசங்களுக்குச் சென்றேன்.

அங்குள்ளவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து வெள்ள நீரை அகற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டேன். இவ்விஜயங்களின் போது தமிழ் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், கமலநாதன், விஜயரட்னம், ஜெயகுமார் ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.

துறவந்தியமேடு பிரதேசம் வெள்ளல் மூழ்கிய போது அப்பிரதேசத்திற்கு இராணுவம் மற்றும் கடற்படையினரின் உதவியோடு படகின் மூலம் சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு, சமைத்த உணவு போன்றவற்றை வழங்கினேன்.

இவற்றினை அறிந்த அமிர்தலிங்கம் "இதுவரை காலமும் இருந்த எந்த ஒரு முதல்வரும் தமிழ் பிரதேசங்களுக்கு வந்ததே கிடையாது. ஆனால் நீங்கள் மேயராகிய குறுகிய காலத்துக்குள்ளேயே எங்களது பிரதேசங்களுக்கு வருகை தந்திருப்பது உங்களின் சிறந்த தன்மையையும் தூய சிந்தையையும் வெளிக்காட்டுகின்றது" என தெரிவித்தார்.

இவ்வாறெல்லாம் தெரிவித்த அமிர்தலிங்கத்திற்கு என்ன நடந்தது என்று உண்மையில் எனக்கு புரியவில்லை. எனது சிந்தனையானது இந்த கல்முனை மாநகரினை இலங்கையின் சிறந்த மாநகராக மாற்றுவதே. அண்மையில் சகல மாநகர சபை உறுப்பினர்களின் கண்காணிப்பில் தெரு மின் விளக்குள் திருத்தும் பணியினை ஆரம்பித்திருந்தேன். ஒவ்வொரு மாநகர சபை உறுப்பினருக்கும் குறிப்பிட்ட தினத்தினை ஒதுக்கியிருந்தேன்.  

ஆனால் இன்று சுய அரசியல் இலாபங்களுக்காக ஏதோவெல்லாம் பேசுகின்றனர். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் 75,000 ரூபா மின் விளக்குகள் கூட தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படவில்லை என அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால் உறுப்பினர்கள் மூலமாக வழங்கிய மின் விளக்குகளின் பெறுமதி 80,000 ரூபாவாகும். கல்முனை மாநகர சபை  நேரடியாகவே தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கிய தெரு மின் விளக்குகளின் பெறுமதியினையும் உறுப்பினர்களுக்கு வழங்கிய பெறுமதியினையும் சேர்த்து பார்க்கின்ற போது அமிர்தலிங்கம் கூறுகின்ற 200,000 ரூபாவை அண்மித்த பெறுமானமுள்ள மின் விளக்குகளையே நான் தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளேன்.

உதாரணமாக கிறிஸ்தவ பாதிரியாரொருவர் என்னிடம் வந்து குறிப்பிட்ட சில வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தித்தருமாறு கேட்ட போது 15 மின் விளக்குகளை பொருத்தி கொடுத்தேன் இதுபோன்று தனி நபர்கள், பொது அமைப்புகள் மற்றும் கழகங்கள் போன்றவற்றின் கோரிக்கைகளுக்கு இணங்கவும் மின் விளக்குகளை வழங்கியுள்ளேன்.

இவ்வாறு தனிப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் போதெல்லாம் அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார். எனது இலக்கு கிழக்கின் முக வெற்றிலை என மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபினால் அழைக்கப்பட்ட கல்முனை மாநகரினை மறைந்த தலைவரின் கனவை நனவாக்கும் முகமாக எமது தேசிய தலைவர் றவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் என்னால் முடிந்தளவு அழகிய நகரமாக மாற்றுவதே ஆகும்.

இதற்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அதற்கு அஞ்சப் போவதில்லை. எனது அபிவிருத்தி பணிகளுக்கு தடையாக சுய அரசியல் இலாபம் தேடும் முகமாக செயற்படும் எந்த ஒரு அரசியல்வாதியின் தடையினையும் உடைத்து எறிய நான் தயார்.
எனது இறுதி மூச்சு வரை இந்த கல்முனை மாநகரின் அபிவிருத்திக்காக என்னை அர்பணித்துள்ளேன்".


You May Also Like

  Comments - 0

  • ilyas Sunday, 04 March 2012 02:14 AM

    வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே. உங்களது பயணம் தொடரட்டும் .

    Reply : 0       0

    mohideen Sunday, 04 March 2012 04:20 AM

    கல்முனை மாநகர சபை செழிப்புற அல்லாஹ் உங்களுக்கு நீண்ட வாழ்க்கையே தர பிரார்திக்கிறன்.

    Reply : 0       0

    shafeek mavadiooooooooor Sunday, 04 March 2012 05:24 AM

    இயற்கையில் அல்லாது செயற்கையிலே மழைபெய்தாலும் காவலனை பழிகூறும் இவ் அகன்றவுலகம் என்று சங்ககாலம் தொடக்கத்தில் உள்ளது நம்மவர் சுமத்தும் பழி. மேலும் அப்பாவும் மகனும் கழுதையில் சென்ற கதைபோல்தான் இருக்கும் அகவே, தூற்றுவார் தூற்ற போற்றுவார் போற்ற எம்பணி தொடரட்டும் எனக்கொள்வோம்............தலைவா............ யாம் இருக்க பயம் ஏன்?

    Reply : 0       0

    maruthuravan Sunday, 04 March 2012 03:52 PM

    இப்போதுதான் உண்மையான மேயர் களமுனைக்கு கிடைத்துள்ளார். அமிர்தலிங்கமாவது எதிர்க்கட்சி தலைவராவது ?

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Sunday, 04 March 2012 04:23 PM

    வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே. உங்களது பயணம் தொடரட்டும். உங்கள் பின்னால் நாங்களும் இருப்போம். அபிவிருத்தி மட்டும்தான் எமது கொள்கை... naara தக்பீர் அல்லாஹ்க் அக்பர்

    Reply : 0       0

    Shaby Monday, 05 March 2012 03:02 AM

    இனிதான் போராட்டம் தொடக்கி இருக்கு. பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

    மீண்டும் கடை Tender Call பண்ணபடுமா மேயர் அவர்களே?

    Reply : 0       0

    rozan Monday, 05 March 2012 03:14 AM

    தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு யுத்தம் முடிந்த பிறகு கொஞ்சம் பிரச்சினையாகத்தான் இருக்கு.....

    Reply : 0       0

    pasha Monday, 05 March 2012 02:30 PM

    மேயர் எது சொன்னாலும் எதிர்க்கட்சி தலைவருக்கு மேயரின் கட்சி தலைமை செவி சாய்க்கும் என்பதால் மேயர் நினைத்த படி எல்லாவற்றையும் செய்ய முடியாது.

    Reply : 0       0

    pottuvilan Monday, 05 March 2012 06:45 PM

    @மிஸ்டர் பாஷா எதிர்கட்சி தலைவர் என்று ஒரு பதவி உண்டா கல்முனை மாநகர சபையில் ?

    Reply : 0       0

    nalanvirumbi Monday, 05 March 2012 11:35 PM

    மேயர் அவர்கள் இந்த விடயத்திலும் உறுதியாக இருந்து மாநகரசபைக்கு வர இருக்கிற பெருந் தொகையான வருமானத்தை இழந்து விடாமல் உடனடியாக முடிவு செய்யப்பட்டவர்களுக்கு கடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும்.

    Reply : 0       0

    hathee Tuesday, 06 March 2012 07:37 PM

    மேயர் அவர்களே. நீங்க முழு நிதியையும் கூட்டமைப்பிடம் கொடுத்தாலும் அவர்கள் திருப்திப்பட மாட்டார்கள்.

    Reply : 0       0

    sabas thalaiva ungal thairiyam enakku pidithirukku thalaiva neengal pallandu kaalam vala wallthukal Wednesday, 07 March 2012 01:20 AM

    வாழ்த்துக்கள் தலைவா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .