2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருக்கோவில் பிரதேச ஓய்வுதிய நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த மாநாடு

Kogilavani   / 2012 மார்ச் 04 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேச ஓய்வுதிய நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த மாநாடும் ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின்  பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கோட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

 

நிதியத்தின் தலைவர் எஸ்.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை பகீரங்க சேவைகள் ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விஜேவிக்கிரம, திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்ணம், அம்பாறை மாவட்ட ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஒ.டபிள்யு.டீ.பீ.குருசிங்க, செயலாளர் ஏ.அகமட் முகைதீன், உபதலைவர் எஸ்.எம். சிறிபால,  திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த எதிரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .