2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுவர்களின் மந்த போஷாக்கை மேம்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 07 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள குடும்பங்களுக்கு பயிர் விதைகள், கன்றுகள் இயற்கைப் பசளைகள் ஆகியன நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

இப்பிரதேசங்களிலுள்ள மந்த போஷக்கான சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 100 குடும்பங்களுக்கு 400,000 ரூபா பெறுமதியான பயிர் விதைகள், கன்றுகள், இயற்கைப் பசளைகள் ஆகியவற்றை வேள்ட்விஷன் நிறுவனம் வழங்கிவைத்தது.

திருக்கோவில் தாண்டிய சமூக பொருளாதார கலாசார அபிவிருத்தி ஒன்றிய காரியாலய மண்டபத்தில்  நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அதிதிகளாக வேள்ட் விஷன் பிரதி செயற்றிட்ட முகாமையாளர் ஜ.மைக்கல், திட்ட இணைப்பாளர்களான  எல்.தயாளன், கிரிஸ்டி ஜெயானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • rozan Thursday, 08 March 2012 12:11 PM

    களவு சூது இல்லையே?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .