2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜே.எம்.ஹனீபா)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட துறைசார் மகளிர் கௌரவிப்பு நிகழ்வும் மகளிர் கலாசார நிகழ்வும்  பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது சமூக சேவையில் அதீத  ஈடுபாடுடைய மகளிர், கலை கலாசார நிகழ்வுகளில் ஈடுபாடுடைய மகளிர், சவால்களுக்கு மத்தியில் கல்வியில் சிறந்து விளங்கிய மகளிர், அதிக வயதுடைய ஆரோக்கியமான மகளிர், திவிநெகும வாழ்வாதார வேலைத்திட்டத்தில் முன்னேற்றமடைந்த குடுமபத் தலைவிகளான மகளிர், நாற்றுமேடை அமைத்து பிரதேச அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த மகளிர் போன்ற துறைசார் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எல்.பரீரா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வுகளில் அதிதிகளாக பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், சமுர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐ.அலியார், விவாகப் பதிவாளரும் வர்த்தக பிரமுகருமான எம்.எம்.உதுமாலெப்பை, நிர்வாக உத்தியோகத்தர் எம்.பீ.அபுல்ஹஸன், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஆர்.எம். ஸாலிஹ், ஏ.சீ.அன்வர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .