Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 08 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மாநகர சபையின் மாதாந்த அமர்வில் மேயரின் வற்புறுத்தல் காரணமாக தான் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட மறுக்கப்பட்டதை கண்டிப்பதாக அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார்.
இந்த செயற்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், இதன் பின்னணியில் ஒரு சூழ்ச்சி திட்டமிடப்படுகிறதோ என - தான் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்து தெரிவித்தாவதுளூ
"அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று – மாநகர சபைக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு காலை 11.00 மணியளவில் நான் சமூகமளித்திருந்தேன்.
இதன்போது, எனது வருகையினைப் பதிவு செய்யும் பொருட்டு, அங்கத்தவர்கள் கையொப்பமிடும் வரவுப் பதிவேட்டினை வழங்குமாறு மாநகர சபையின் செயலாளரிடம் கேட்டேன். ஆனால், குறித்த பதிவேட்டினை மேயர் வழங்க வேண்டாம் எனக் கூறியுள்ளார் எனத் தெரிவித்து, அதை என்னிடம் தருவதற்கு செயலாளர் மறுத்து விட்டார்.
இரண்டாவது தடவையாகவும், குறித்த வரவுப் பதிவேட்டினை வழங்குமாறு செயலாளரைக் கேட்டபோது, முன்பு கூறிய காரணத்தினை தெரிவித்து மீண்டும் அவர் மறுத்து விட்டார்.
மாநகர சபையின் கடந்த இரண்டு அமர்வுகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. சாதாரணமாக, உறுப்பினரொருவர் தொடர்ச்சியாக 3 சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் விடும்போது, அவர் தனது உறுப்புரிமையை இழக்க நேரிடும்.
சிலவேளை, நான் இன்று மாநகர சபைக்கு சமூகமளித்தமையை வரவுப் பதிவேட்டில் பதியாமல் தடுத்ததன் மூலமாக, மூன்று அமர்வுகளுக்கு நான் சமூகமளிக்கவில்லை என தெரிவித்து, எனது உறுப்பினர் அந்தஸ்;தினைக் கேள்விக்குள்ளாகுவதற்காகவே, மேற்சொன்ன சதியினை மேயர் செய்திருக்கலாம் என்று நான் சந்தேகிக்கின்றேன்.
இதேவேளை, இவ்விடயத்தினை உரிய அதிகாரிகளுக்கும், எனது கட்சியின் தலைமைப் பீடத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்" என்றார்.
easternbrother Friday, 09 March 2012 01:57 AM
சார்...... உடன் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
Reply : 0 0
pottuvilan Friday, 09 March 2012 02:57 AM
குண்டு சட்டியில் நல்லா குதிரை ஓட்டுகிறார்கள் தந்தையும் தமையனும். சிலவேளை இங்கும் குடும்ப ஆட்சி நடத்தும் திட்டமோ தெரியல்ல?
Reply : 0 0
kulathooran Friday, 09 March 2012 03:31 AM
துள்ளுது பொதி சுமக்கும்.
Reply : 0 0
akkarappaththaan Friday, 09 March 2012 01:48 PM
ஆசுபத்திரி விடயமாக வாய் தொறந்துடுவிங்க என்ட பயம் தான்.
Reply : 0 0
சிறாஜ் Sunday, 11 March 2012 07:16 PM
மதனி உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். சபை அமர்வின் போது கடைசி நேரத்தில் வந்தாலும் ஒப்பமிடலாம் என்பது மேயருக்கு தெரியாது போல.
Reply : 0 0
Finder Monday, 12 March 2012 07:36 PM
நீங்க எப்ப குதிரையில் தாவுவீங்க?
Reply : 0 0
Mind Monday, 12 March 2012 07:53 PM
முஸ்லிம் காங்கரஸ் என்ன தான் செய்திருக்கு. இப்ப ஆளும் கட்சில இருந்திட்டு என்ன தான் சாதீச்சங்க.
இவருக்கு அரசியல் தேவை தானா
Reply : 0 0
hathee Wednesday, 14 March 2012 12:23 AM
நீங்க எத்தனை பேருக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கீங்க?
Reply : 0 0
kamran Wednesday, 14 March 2012 06:26 PM
முதல்ல நபீல் இற்கு சொல்லுங்கோ எப்படி நீங்கள் மனாப எடுத்தீர்கள் என்று.
இதெல்லாம் மௌலவிக்கு சிம்பிள் தானே?
Reply : 0 0
s.sinasudeen Thursday, 15 March 2012 02:43 PM
குடும்ப ஆட்சி நடத்தும் திட்டமோ அதுதான் இப்போ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago