2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று அமைப்பாளர் தேசிய காங்கிரஸில் இணைவு

Super User   / 2012 மார்ச் 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் அறிவித்துள்ளார்.

தனது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே உவைஸ் இந்த அறிவித்தலை விடுத்தார். இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸுல் சுராவின் பிரதி தலைவர், அக்கரைப்பற்று அமைப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தவாகவும் பிரகடணப்படுத்தினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவை கலைப்பதுடன் தன்னால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச கொத்தணி அமைப்பாளர்களின் பதவியை இரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட உவைஸ் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

யூ.எல்.உவைஸுடன் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எம்.பஹீஜ் உள்ளிட்ட சுமார் ஐந்து அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தல் வேட்பாளர்களும் தேசிய காங்கிரஸில்  இணையவுள்ளனர்.

இதேவேளை, "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட காரணம் இதுவரை நிறைவேறவில்லை. அத்துடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு எந்தவித நடடிக்கையும் மேற்கொள்ளவிலை. இதனாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிவிதாக" சட்டத்தரணி பஹீஜ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்டத்தரணி பஹீஜ் மேலும் தெரிவிக்கையில்,

" அக்கரைப்பற்று பிரதேசத்தில் மாற்று அரசியலை மேற்கொள்வதற்கு எந்தவொரு வியூகத்தையும் இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது.

இந்நிலையில் கிழக்கு மாகாண மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுள்ள அமைச்சர் அதாவுல்லாவை பலப்படுத்தி அக்கரைப்பற்று அரசியலையும் கிழக்கு மாகாண அரசியலையும் பாதுகாப்பதற்காக தேசிய காங்கிரஸில் இணைகின்றோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • Solpavan Monday, 12 March 2012 11:03 PM

    தம்பி உவைசு, மேலுள்ள விபரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இடத்தில நேஷனல் காங்கிரஸ் என்று போட்டு வாசித்து பாருங்கோ.

    Reply : 0       0

    சேணையுரான் Monday, 12 March 2012 04:27 PM

    பெயர் சொல்லி புகழ் தேட வேண்டிய அவசியம் இவருக்கில்லை.
    அதா உல்லாவை தன்னந் தனி மனிதனாக நின்று அமைசராக்கிய பெருமை போதும்! இருந்தும் நீங்கள் செய்த நன்றியை மறந்து விட்டாரோ தெரியல்ல சற்று பலசையும் ஞாபகப்படுத்துங்க.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Monday, 12 March 2012 04:28 PM

    மீண்டும் வருவாங்க பாருங்க. அடுத்த கிழக்கு மாகாண ஆட்சி ஆளும் மரத்தின் கைலதான் .இன்ஷா அல்லாஹ்.
    யூ.எல்.உவைஸ், இப்போ என்னத்த கிழிக்க போரியல் என்று பார்போம. இந்த மாற்றம் மக்கள் நலன் அல்ல உங்கள் நலன் மட்டும் தான்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட காரணம் இதுவரை நிறைவேறவில்லையாம். இத நீங்கள் சொல்ல படாது.

    Reply : 0       0

    Nanpan... Monday, 12 March 2012 04:53 PM

    இப்படிதான் பக்கத்துக்கு ஊர்ல இருக்கிற ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கடந்த வருடம் அதா.. ஓட சேர்ந்து இப்ப திரும்பவும் அதை விட்டு விலகிட்டாரு.. இதே நிலைமைதான் உங்களுக்கும்.
    அக்கறை மாட்டுக்கு இக்கரை பச்சைதான், எதை நம்பி போறீங்களோ அது கட்டாயம் கிடைக்காது.. அங்க ஏற்கனவே நிறையப்பேர் லைன்ல நிக்காங்க ஒங்களுக்கு சொன்ன புரியாது பட்டாதான் புரியும். (குதிரை அக்கரப்பதை தாண்டி எப்பவும் ஓடாது) அதுக்கு ஒரு தகுதி வேணும்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro* Monday, 12 March 2012 04:53 PM

    முஸ்லிம் காங்கிரசை குறை கூறுபவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அல்ல மு.க யில் இலாபம் பெற முனைந்து அது பெறப்படாமல் விரட்டப்பட்டவர்கள்தாம் குறை கூறி திரிபவர்கள்.... இவர்கள் எல்லாம் சுய நலவாதிகள்....

    Reply : 0       0

    Mohamed Monday, 12 March 2012 05:09 PM

    எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! நீங்க சேர்ந்ததினால் அதிகம் சந்தோசப்படுவது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே! தலைவருக்கு மிகவும் சந்தோசமா இருக்கும்! இன்னம் இரண்டு ............ அங்கு இருக்கிறார்கள் அவர்களும் போனா பெரிய உதவியா இருக்கும்! மரம் அது விருட்சமாய் வளரும்!!!

    Reply : 0       0

    manon Monday, 12 March 2012 06:12 PM

    தன்னை, தன் வாழ்க்கையை காங்கிரசுக்கு அர்பணித்த ஒரு தியாகியின் விலகல். ஒரு கோடி கதைகளையும் வழிகளையும் சுமந்துதான் பிரிந்திருக்கிறது. தலைமையின் வியாபார சிந்தனை. இன்னும் பல தியாகிகளை இழக்க நேரிடும். அதாஉல்ல ஒரு நல்ல சானகியன்.

    Reply : 0       0

    Mind Monday, 12 March 2012 07:05 PM

    இது எல்லாம் அரசியல சகம் அப்பா. இன்று இங்கே நாளை எங்கே?

    Reply : 0       0

    Finder Monday, 12 March 2012 07:28 PM

    naayodu padukka ponal unniyoda ellumbuvaar

    Reply : 0       0

    riyas Monday, 12 March 2012 07:45 PM

    கிழக்கில் தலைமை உருவாக வேண்டாமா உருப்படியா கருத்து சொல்லுங்களேன்?

    இன்னும் எத்தின காலத்துக்கு இந்த மு கா முஸ்லிம்களுக்கு? செய்து கிழிச்ச என்ன இவ்வளவு காலமும்.?

    கல்முனை மக்கள் மாத்திரம் மிச்சம் இருக்கு இந்த கோன்க்ராசுக்கு

    Reply : 0       0

    Maravan Monday, 12 March 2012 07:52 PM

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள், இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் நம்பிக்கையை இழந்துள்ளது....யார் சொன்னங்க...சும்மா போங்கயா....உங்கட தாவலைத் தொடருங்கோ... தமிழ் தேசிய கூட்டமைப்புபை இழுக்கதேங்கோ..

    Reply : 0       0

    ahamed Monday, 12 March 2012 09:02 PM

    நல்ல ஜோக்

    Reply : 0       0

    JIHA Monday, 12 March 2012 04:12 PM

    இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தது இப்பதான் அறிந்தோம்.

    Reply : 0       0

    Mohamed Fowse Tuesday, 13 March 2012 01:22 AM

    இவர்கள் அரசியல் தொழில் செய்கிறவர்கள். லாபம் எங்கே கிடைக்கிறது அங்கே செல்வார்கள். காலில்லா குதிரைக்கு கடிவாளம் இருந்தாலென்ன இல்லாட்டி என்ன...?

    Reply : 0       0

    Rauff Tuesday, 13 March 2012 03:07 AM

    இன்று இவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மை என்றால் , நேற்று இவர்கள் சொன்னது எல்லாம் பொய் . நேற்று இவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றால், இன்று இவர்கள் சொல்லுவது எல்லாம் பொய் . ஆக மொத்தத்தில் இவர்கள்தான் சிறந்த கோமாளிகள் மட்டுமல்ல மிகச்சிறந்த சந்தர்ப்பவாதிகள். இவர்கள் எங்கு இருந்தாலும் வளரட்டும் இவர்களது வாயும் வயிறும்.

    Reply : 0       0

    Hari Tuesday, 13 March 2012 03:41 AM

    தம்பி, உவைஸ், தம்பி பஹீஜ், இப்பத்தான் உங்களுக்கு அரசியல் ஞானம் புரிந்ததோ?

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 13 March 2012 04:19 AM

    உவைசுக்கு பின்னால் பல ஆயிரம் மக்கள் இருந்தால் பறவாய் இல்லை இவர் தனிமையில் போகும் குதிரையில் ஏற ஆசைப்பட்டிருகிறார் கேட்ட தேர்தல் எல்லாத்திலும் தோல்வி அப்படி இருக்கும் போது இப்ப மட்டும் என்னத்த கிளிக்கப்போகிறார் மகனுக்கு குதிரை மூலம் கொடுத்த மேயர் பதவி பிடிக்காமல் தவம் கிடந்த தவம் மாறி விட்டார் இப்ப இவரு போய் ஏன் ஒட்டியிருக்கிறார் இன்னும் கொஞ்ச நாளில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடும் நிலை வரும்

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 13 March 2012 04:23 AM

    உவைசுக்கு பின்னால் பல ஆயிரம் மக்கள் இருந்தால் பறவாய் இல்லை இவர் தனிமையில் போகும் குதிரையில் ஏற ஆசைப்பட்டிருகிறார். கேட்ட தேர்தல் எல்லாத்திலும் தோல்வி அப்படி இருக்கும் போது இப்ப மட்டும் என்னத்த?

    Reply : 0       0

    Najath Tuesday, 13 March 2012 03:40 PM

    சாத்தியம் + சந்தர்ப்பம் + சாதித்தல் = அரசியல்
    அரசியல் + மனிதன் = அரசியல்வாதி
    அரசியல்வாதி - சந்தர்ப்பம் = மனிதன்
    ஏன் இந்த சீரழிந்த அரசியல் ?

    Reply : 0       0

    siriththiran Tuesday, 13 March 2012 05:42 PM

    இது கோதுமை மாவில் பிட்டு செய்வதும் இடியப்பம் போல ஒரே கதை தானப்பு .............

    Reply : 0       0

    vaanmoli Tuesday, 13 March 2012 06:16 PM

    நல்ல சகுனம் !

    Reply : 0       0

    s.sinasudeen Wednesday, 14 March 2012 10:25 PM

    நல்ல முஸ்லிம் காங்கிரசை குறை கூறுபவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அல்ல மு.க யில் இலாபம் பெற முனைந்து அது பெறப்படாமல் விரட்டப்பட்டவர்கள்தாம் குறை கூறி திரிபவர்கள்.... இவர்கள் எல்லாம் சுய நலவாதிகள்.... வாழ்க முஸ்லிம் காங்கிரஸ் வளர்க முஸ்லிம் காங்கிரஸ் சினாஸ்.

    Reply : 0       0

    Moothappa Thursday, 15 March 2012 04:19 AM

    நாயோட படுக்கப் போனால் உன்னியோட எழும்பி வருவாங்க. விதி யார விட்டு வெச்சிச்சி?

    Reply : 0       0

    MA. Nazeerudheen Saturday, 17 March 2012 11:28 PM

    தோத்துத் தோத்துக் கிடக்காம ....போனத்துக்கு ரொம்ப நன்றி.

    Reply : 0       0

    Abdul lateef Monday, 12 March 2012 05:28 AM

    சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை..........

    Reply : 0       0

    ooraan Monday, 12 March 2012 01:41 AM

    அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் .....அது சருகுக்குள்ளதான் போய் பூரும்......... .எல்லாருக்கும் பதவி ஆசையும் ........பண ஆசையும் ..........நல்லா இருந்தா சரிங்க ...

    Reply : 0       0

    ganesh Monday, 12 March 2012 01:52 AM

    வணக்கம்

    Reply : 0       0

    Mohamed .S. Anwar Monday, 12 March 2012 01:52 AM

    பிரபல்யமாவதற்கு கட்சி மாறுவதுதான்வழி?

    கனவான்.

    Reply : 0       0

    iniyavan Monday, 12 March 2012 03:01 AM

    யாரு எங்க சேர்ந்தாலும் சேராட்டிலும் இவங்க திருந்த சந்தர்ப்பமே இல்லைங்கோ.....

    Reply : 0       0

    A Jauhar Monday, 12 March 2012 03:18 AM

    நாயில் பயந்து பேயில் விழுந்து..........

    Reply : 0       0

    m.i.samsudeen Monday, 12 March 2012 03:21 AM

    எல்லோரும் மாறும் போதும் இவ்வாறுதான் சொன்னீர்கள். விலகியவர் எவரும் வீண் போகவில்லை.

    Reply : 0       0

    meenavan Monday, 12 March 2012 03:22 AM

    அரசியல் சாக்கடையில் இதுவெல்லாம் சகஜம்.

    Reply : 0       0

    ummpa Monday, 12 March 2012 03:49 AM

    இவர் மாறினால் என்ன ?

    Reply : 0       0

    m.i.samsudeen Monday, 12 March 2012 03:56 AM

    மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன அக்கரைப்பற்றில் அவராவது இருந்தார்

    Reply : 0       0

    AKPp Monday, 12 March 2012 04:04 AM

    இப்போது விளங்கிரிக்கும் இவருக்கு ..பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்களை பத்தி .......

    Reply : 0       0

    uvais.m.s Monday, 12 March 2012 04:15 AM

    மக்கள் நலன் யாரிடமும் இல்லை. இவர்கள் அரசியல் தொழில் செய்கிறவர்கள். லாபம் எங்கே கிடைக்கிறது அங்கே செல்வார்கள்.

    Reply : 0       0

    najath Monday, 12 March 2012 01:37 AM

    உதவாத கட்சியில் யார் இருந்தால்தான் என்ன

    Reply : 0       0

    Careem Monday, 12 March 2012 05:31 AM

    அதாவுல்லாவை நம்பி போகிறனீங்க அவருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாருங்களன் .......

    Reply : 0       0

    Ruzan Monday, 12 March 2012 06:19 AM

    சுயநல அரசியல்தான் இது. இவர்களை பற்றி கருத்து சொல்வதும் வேஸ்ட்ங்க.

    Reply : 0       0

    sakeena nelugollakada. Monday, 12 March 2012 07:49 AM

    காலில்லா குதிரைக்கு கடிவாளம் இருந்தாலென்ன இல்லாட்டி என்ன...?

    Reply : 0       0

    neruppu Monday, 12 March 2012 01:26 PM

    அரசியல் என்பது லாபத்தை அடிப்படையாகக் கொண்டது. லாபம் கிட்டாதாயின் வெட்டென மாற

    Reply : 0       0

    akkarappaththaan Monday, 12 March 2012 02:43 PM

    தலைவரே
    தம்பி உவைசுக்கு தவத்திண்ட இடத்த கொடுக்கலாம்.

    Reply : 0       0

    MUHAMMAD Monday, 12 March 2012 02:53 PM

    தம்பி உவைஸ் உங்களுக்கு காலம் கடந்து ஞானம் பிறந்து உள்ளது.

    Reply : 0       0

    abdullah` Monday, 12 March 2012 02:58 PM

    இனிமேல் தான் எமதுமக்கள் சந்தோசப் படுவாகள் துலைந்ததுடா கிறகங்கள் முஸ்லீம் காங்கிரஸ் என்ற பெயரில் வந்த காசுகளை அவன் சுரிட்டியதால் கணக்குகளை விபரம் கேட்டதால் இந்த நிலை பாவம் இப்பதான் உவைஸ் ஆண்மிக கட்சியில் சோர்ந்துள்ளாராம் அதாவுல்லாட ஆண்மையை பரிசோதனை செய்வதற்கு யாரையும் பலிகொடுத்துள்ளாக்கும் .

    Reply : 0       0

    DJ Monday, 12 March 2012 03:03 PM

    அப்போ பஹீஜ் என்னத்துக்கு கடந்த தேர்தலில் அளவுக்கு அதிகமாக அறப்படிச்ச கதை கதைச்சது............................ அதாவுல்லாவை வெளுத்துக்கட்டியது.............. அதாவுல்லாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா இந்த பஹீஜ்? .

    Reply : 0       0

    M.Keizer Monday, 12 March 2012 03:22 PM

    அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க

    Reply : 0       0

    அகரையூரான் Monday, 12 March 2012 03:34 PM

    இவங்க ரெண்டு பேருக்காகவும் அடிச்சி , வீட்டை உடைச்சி, இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிய அடிப்பொடிகள் இப்ப எந்த முகத்த வச்சிக்கி சந்திக்க போறாங்க?

    அதோட, அந்த கலவரங்களுக்கும் அடிபிடிகளுக்கும் அர்த்தம்தான் இப்போ என்ன?

    எப்பிடியோ ஊர்ல பிரச்சினை இல்லாம இருந்தா மகிழ்ச்சி.

    Reply : 0       0

    muhammath ranoos Monday, 12 March 2012 03:39 PM

    உவைஸ் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ... முன்னர் சரியானது, இன்று பிழையானது. இன்று சரியானது நாளை பிழை ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது இதுதான் அரசியல் என்று சொல்லிவிட வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .