2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி

Super User   / 2012 மார்ச் 11 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சனிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. பியசேன, அங்குள்ள குறைபாடுகளைப் பார்வையிட்டதோடு, வைத்தியசாலைக்கான அவசிய தேவைகள் சிலவற்றினை உடனடியாக பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர், உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, சத்திர சிகிச்சை பிரிவு, வைத்தியர்கள் விடுதி, வெளி நோயாளர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளைச் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் - அங்கு நிலவும் குறைபாடுகளை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றித் தருவதோடு, நோயாளர் விடுதிக்குத் தேவையான படுக்கை மெத்தை, மட்டும் படுக்கை விரிப்பு உள்ளடங்கலானவற்றை உடனடியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது, வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த வருகையின் போது, அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என பலர் பிரசன்னமாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • ***மல்லிகை சிராஜ்***siro Monday, 12 March 2012 05:23 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    UMMPA Monday, 12 March 2012 06:13 PM

    ஆளுமை வேண்டும் அதக்கு. உங்களிடமிருந்து படிக்கவேண்டும் மற்ற குடும்ப பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள். வாழ்க உங்கள் பயணம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .