2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கனரக வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் சிறுவன் பலி

Kogilavani   / 2012 மார்ச் 12 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று  பனங்காட்டு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கனரக வாகனத்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

அட்டாளைச்சேனை தர்கா நகரை பிறப்பிடமாகக் கொண்ட என்.முஜாத் (வயது 16) என்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று மின்கம்பத்தில்; மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக   அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .