2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுபோக நெற்செய்கை ஆரம்பிப்பது தொடர்பிலான கூட்டம்

Kogilavani   / 2012 மார்ச் 13 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்லோயா ஆற்றுப்பாய்ச்சல் விவசாயிகளுக்கு இவ்வாண்டுக்கான சிறுபோக நெற் பயிர்ச்செய்கையினை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவுறுத்தும் கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது, விவசாயிகள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் விஷேடமாக காட்டு யானைகளின் பிரச்சினை, விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கான களஞ்சிய சாலையின் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இதேவேளை, 2012 சிறுபோக நெற்செய்கை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 25ஆம் திகதிக்குள் நிறைவுசெய்யவேண்டுமெனவும்  தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, அம்பாரை பிராந்திய நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எஸ்.எல்.வீரசிங்க, அம்பாரை மாவட்ட உதவி நீர்பாசன பணிப்பாளர் எஸ்.எல்.எம்.அலியார், அம்பாரை மாவட்ட கமநல சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். லத்தீப், நீர்பாசன் பொறியியலாளர் எம்.ஐ.எம்.இப்றாஹீம் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .