2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்லுடைக்கும் தொழிற்சாலையை கையளிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 13 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, ஆத்திமுனை பிரதேசத்தில் 18 இலட்சம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்ட கல் உடைக்கும் இயந்திர தொழிற்சாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

திருக்கோவில் தாண்டிய சமூக பொருளாதார கலாசார அபிவிருத்தி ஒன்றியமானது, பொத்துவில் சர்வோதயபுரம் கிளை நிறுவனத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு வாழும்  குடும்பங்களில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவுள்ளது. இந்நிலையில் இக்கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதியை இப்பாலர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவைத்து அவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவவுள்ளது.  

சர்வோதயபுரம் செக்டா நிறுவனத் தலைவர் எம்.எல்.முகமட் தம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக  பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.வாஹித், வேள்ட்விஷன் முகாமையாளர் ஜ.மைக்கல், சமூக பொருளாதார கலாசார அபிவிருத்தி ஒன்றியத்தின் முகாமையாளர் எஸ்.கோபிநாத், செக்டா நிறுவனத்தின் தலைவர் சதாசிவம், உபதலைவர் எம்.ஏ.சி.எம்.றஹ்மத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .