2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமணல் ஏற்றியவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
 
அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி உழவு இயந்திரத்தில் ஆற்றுமணல் ஏற்றிய ஒருவருக்கு 5,000 ரூபா தண்டம் விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

ஆற்றுமணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில்  உழவு இயந்திரத்தில் ஆற்றுமணல் ஏற்றிய ஒருவரை கடந்த 7ஆம் திகதி உழவு இயந்திரத்துடன் கைதுசெய்த பொலிஸார்,  அவரைப் பிணையில் விடுவித்தனர்

இந்நபர் நேற்றையதினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .