2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டு வதிவிட பிரதிநிதி – கல்முனை மேயர் சந்திப்பு

Super User   / 2012 மார்ச் 15 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஆசியா மன்றத்தின் கொரிய நாட்டிற்கான வதிவிட பிரதிநிதி பீட்டர் பெக் இன்று வியாழக்கிழமை கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டார்.

கல்முனை மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த இவர், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்து கலந்துரையாடினார்.

ஆசியா மன்றத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் கல்முனை மேயர்  செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதம வைத்தி அதிகாரி டாக்டர் ஹபிபுல் இலாஹிஇ மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை மேயரிடம் மாநகர சபைக்காக கணனி இயந்திரமொன்றும் கல்முனையின் அபிவிருத்தி தெடர்பான நிகழ்சித்திட்டத்தின் பிரதியும் ஆசிய மன்ற பிரதிநிகளினால் கையளிக்கப்பட்டது.

கல்முனை மாநகரின் புதிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கும் எதிர்கால அபிவிருத்திக்கு உதவுவதற்கும் ஆசிய மன்றத்தினால் இக்கலந்துரையாடலின் மூலம் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

அத்துடன் கல்முனை மேயரை கொரிய நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பீட்டர் பெக் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Abdullah,Kalmunaikudy. Saturday, 17 March 2012 01:43 PM

    மருதமுனை அகார் .......
    யார் செய்தாலும் நல்லது நடந்தால் சந்தோசம் தானே, சாய்ந்தமருதை சேர்ந்த முதல்வருடன் மருதமுனை உதியோகத்தர்கள் இணைந்து கல்முனை அபிவிருத்திக்கு முன்னிற்பது சந்தோசம்...இப்போது தான் பொருத்தமான முதல்வர் கல்முனைக்கு கிடைத்துள்ளார் வாழ்த்துக்கள் ....

    Reply : 0       0

    Rinsaaf Wednesday, 21 March 2012 08:48 PM

    இலங்கை நம் நாடு

    Reply : 0       0

    basaam Tuesday, 20 March 2012 03:51 PM

    முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    A.M.kaleelul rahman, akkaraipattu. Monday, 19 March 2012 01:39 PM

    ஆசிய மன்றதின் இணைப்பாளர் வலீத் மாநகர சபையில் அனுசரணை ஆக இருப்பது முதல்வருக்கு கடும் பலம்....

    Reply : 0       0

    furkan mohamed,Sainthamaruthu Sunday, 18 March 2012 05:32 AM

    எங்களது முதல்வர் வல்லவர் .

    Reply : 0       0

    A.M.Jaseel,Sainthamaruthu Sunday, 18 March 2012 05:25 AM

    அப்துல்லாஹ்.... அஜ்மல்கான்
    ஒரு சிலர் அவர்களும் செய்ய மாட்டார்கள் ..... செய்பவனையும் விட மாட்டார்கள் .... நல்லதை யார் செய்தலும் பாராட்ட மனது வேண்டும்.

    Reply : 0       0

    ajmal khan,akkaraipattu Saturday, 17 March 2012 10:35 PM

    அப்துல்லாஹ்....
    உங்களின் கருத்து முற்றிலும் சரியானது.. கல்முனை குடியில் உங்களை போன்றவர்கள் இருப்பது மகிழ்ச்சி.

    Reply : 0       0

    krisnamoorthy Saturday, 17 March 2012 09:40 PM

    தயாளன்...
    ஆசிய மன்றத்தின் செயட்திட்டம் காரணமாக பல மில்லியன் ரூபா பணம் அறவீடு செய்யபட்டுள்ளது, இதில் உரிய அபிவிருத்திகள் நடக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    Reply : 0       0

    MKJ.Thayalan. Saturday, 17 March 2012 01:57 PM

    ஆசிய மன்றதிட்கு நன்றிகள் ....முதல்வரின் அண்மைய செயல்கள் தமிழர்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது .நல்ல பணி தொடர வாழ்த்துக்கள் .....

    Reply : 0       0

    rozan Friday, 16 March 2012 02:32 AM

    நாடு சுத்துங்க தலைவா...

    Reply : 0       0

    askar mohamed. Saturday, 17 March 2012 02:39 AM

    நீதியாக பக்கசார்பின்றி வருகைக்கு காரணமானவர்களை இணைத்து செய்திகள் பிரசுரித்துள்ள தமிழ் மிரருக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    zeefa Friday, 16 March 2012 09:26 PM

    நீங்க உருப்படியா ஏதாவது செய்து காட்டுக... பதவி எடுத்து ஆறு மாதம் ஆகிவிட்டது இன்னும் ஒன்னரை வருடம்தான் இருக்குது தம்பிக்கு.

    Reply : 0       0

    Hassan Friday, 16 March 2012 04:12 PM

    போகும் போது அக்ரம்யும் கூட்டி போங்கோ தலைவா. அவர் நல்லா கொரியன் பாசை பேசுவார்.

    Reply : 0       0

    Maruthamunai Akar Friday, 16 March 2012 03:20 PM

    pakistan, கொரியா என்று எல்லா தூதுவர்களை சந்தித்து அவர்களின் உதவி பெற்று இந்த கல்முனை அபிவிருத்தி செய்ய துடிக்கும் உங்களைப்; போன்ற நல்ல மேயருக்கு எங்கள் மருதமுனை மக்கள் எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க மேயர் சிராஸ்.

    Reply : 0       0

    sankaran Friday, 16 March 2012 02:08 PM

    தலைக்கனம் இனவாதம் இல்லாத மேயர் . தமிழ் மக்கள் சார்பான வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் பணி

    Reply : 0       0

    awathani Friday, 16 March 2012 01:41 PM

    கொரியாவுக்கு பிரதம அதிதியாக அழைத்தால் தானே நமது மேயர் போவார்?

    Reply : 0       0

    kulathooran Friday, 16 March 2012 03:43 AM

    கொரிய வதிவிட பிரதிநிதி எனும் போது வட or தென் கொரிய பிரதிநிதி? எதுவாக இருந்தாலும் புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் அச்சாரமாக கணணி கிடைத்துள்ளது, உங்களது கொரிய விஜயத்தில் வட எல்லையிலும் கேட்வே அமைக்க நிதி பெறுவதுடன் தென் எல்லை கேட்வே யையும் மறக்க வேண்டாம், உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .