2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஜனசெவன பயனாளிகளுக்கு காசோலைகள், வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 16 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட ஜனசெவன பயனாளிகளுக்கு வீடமைப்பதற்கான காசோலைகள்,  வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் கூரைத்தகடுகள் வழங்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

168 பயனாளிகளுக்கு வீடமைப்பதற்கான காசோலைகளும்  83 பேருக்கு வீட்டு உறுதிப்பத்திரங்களும்  40 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகளும் வீடமைப்பு, நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் வழங்கிவைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதித்தலைவர் ஏ.ஜயந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம,  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Friday, 16 March 2012 09:08 PM

    பயனாளிகள் 168 பேரில் சிறுபான்மை தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை.......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .