Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஆரம்பப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து இதுவரையில் குடியேற்றத்துக்கு செல்லாதோரை மீளக்குடியமர்த்துவது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கும் உயர் மட்டக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபின் அவர் இதைத் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் கோபாலரட்னம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, சிரேஷ்ட உதவிச்செயலாளர் திருமதி தவஈஸ்வரி கெனியூட்சன், அமைச்சின் செயலாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டட மகளிர் அமைப்பாளர் உருத்திரமலர் ஞானபாஸ்கரன், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் கலந்துகொண்டனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த இக்குடும்பங்கள் திருக்கோவில், விநாயகபுரம் போன்ற பிரதேசங்களில் உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றன. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவான முறையில் மீளடியேற்றம் செய்யப்படுவதற்கான ஆரம்ப பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் இந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக 300 வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் முறையாகச் செய்யப்பட்டுள்ளன. அதில் வீடு நிர்மாணம், நீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, பாதை நிர்மாணம், போன்றவற்றோடு விவசாயம், மீன்பிடி, சேனைப்பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான தொழில்சார் உபகரணங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன், தங்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் வகையில் இரண்டு கிராமங்களின் சங்கங்கள், அமைப்புகளுக்கு காணிகள், பொது இடங்கள், பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றினைத் துப்பரவு செய்வதற்கான கத்தி, கோடாரி, மண்வெட்டி, உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் கஞ்சிகுடியாறு கிராமத்தின் 406 குடும்பங்களைச் சேர்நத 1435 பேரும், தங்கவேலாயுதபுரம் கிராமத்தின் 424 குடும்பங்களைச் சேர்ந்த 1254 பேருமாக மொத்தம் 2689 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம் ஆகிய கிராமங்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினரே சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதிகளில் சுய விருப்பின் பேரில் குடியேறியுள்ள மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அத்துடன் திருக்கோவில் பகுதியில் தற்போது தற்காலிகமாக தங்கியுள்ள தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேசங்களையும் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் கோபாலரட்னம், திணைக்களத்தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago