2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உரைப்பையில் குழந்தையின் சடலம் காணப்படுவதாக வதந்தி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, கல்முனை  மணற்சேனை மயானத்தில் உரைப்பையில் குழந்தையொன்றின் சடலம் காணப்படுவதாக  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவைக்கு கிடைத்த அநாமதேய அழைப்பையடுத்து அப்பிரதேச மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர்.

அதிகாலை 4 மணியளவில் 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவைக்கு கல்முனை சேனைக்குடியிருப்பு மயானத்தில் உரைப்பையில் குழந்தையொன்றின் சடலம் காணப்படுவதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த மயானத்திற்கு பொலிஸார் சென்று பார்த்தபோது உரைப்பையின் வாய்; கட்டப்பட்ட நிலையில் மூடையாக காணப்பட்டது.
உரைப்பையை திறப்பதற்கு    நீதிபதி வரும்வரையில் பொலிஸார் அவ்விடத்தில் காலை 10 மணிவரை பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் நீதிபதியின் முன்னிலையில்  கட்டப்பட்டிருந்த  உரைப்பையை பொலிஸார் திறந்தபோது, அதில் குப்பைகளுடன் சில உரைப்பைகள் காணப்பட்டன.

இது சில விசமிகளின் ஏமாற்று நடவடிக்கையென பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .