Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 20 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று செவ்வாய்கிழமை பெரிய நீலாவணை வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது, குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் கடமைக்குச் சமுகமளிக்காமையினைக் கண்டறிந்ததோடு, இது தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டார்.
பெரிய நீலாவணை வைத்தியசாலையின் வைத்தியர் - கிரமமாக வைத்தியசாலைக்குச் சமுகமளிப்பதில்லை என்றும் கடமை நேரங்களில் வைத்தியசாலையில் இருப்பதில்லை எனவும் பொதுமக்களால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் செய்திகளைச் சேகரிக்கும் பொருட்டு இன்று காலை நாம் - பெரியநீலாவணை வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம்.
இதன்போது, வைத்தியசாலைக்கு வெளி நோயாளர்கள் வந்திருந்த போதும் அங்கு வைத்தியர் சமூகமளித்திருக்கவில்லை.
இந்த நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ். இப்றாலெப்பை மற்றும் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரி. மர்சூக் ஆகியோர் பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு திடீரென வருகை தந்திருந்தனர்.
இதன்போது, வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் சிலர் கடமைக்கு சமுகம் தராமையினைக் கண்டறிந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் கடமைமைக்கு முறையாக சமூகமளிக்காமை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ். இப்றாலெப்பை கூறுகையில்ளூ
'பெரியநீலாவணை வைத்தியசாலையின் வைத்தியர் தினமும் கிரமமாக கடமைக்குச் சமுகமளிப்பதில்லை எனவும், கடமை நேரம் நிறைவடையும் வரை வைத்திசாலையில் இருப்பதில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பிலான உண்மை நிலையைக் கண்டறியும் பொருட்டு நாம் இன்று இந்த வைத்தியசாலைக்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டோம். இந்த வேளையில் குறித்த வைத்தியர் கடமைக்குச் சமூகம் தரவில்லை. அதேவேளை வைத்தியரால் விடுமுறை பெறப்படவுமில்லை.
இந்த நிலையில், நோயாளர்கள் வைத்தியருக்காகக் காத்திருப்பதையும், சிலர் திரும்பிச் செல்வதையுயும் நாம் நேரடியாகக் கண்டு கொண்டோம்.
இந்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் பல மருத்துவக் கருவிகளை நாம் வழங்கியுள்ள போதும், அவை தூசு படிந்த நிலையிலும், சில உபகரணங்கள் பொதி பிரிக்கப்படாமலும் பிரயோசனப்படுத்தப்படாமல் உள்ளன.
எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதோடு, உரிய தீர்வு கிடைக்க ஆவண செய்யவுள்ளோம்' என்றார்.
மேற்படி வைத்தியசாலையானது மத்திய மருந்தகம் தரத்திலானது. பெரிய நீலாவணை பிரதேசத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
SLM Tuesday, 20 March 2012 09:37 PM
அய்யா, அப்படியே நீங்க போற வழில கல்முனை வைத்தியசாலைக்கும் உங்க வாகனத்த திடீரென விட்டு பாருங்கோ.
Reply : 0 0
செம்பகம் Wednesday, 21 March 2012 02:32 PM
ஐயா இந்த விடயத்தை பார்த்தது மட்டுமல்லாமல் மற்றவருகளுக்கும் பாடம் புகட்டுர மாதிரி உங்கட அதிகாரத்தை பாவியுங்கள். அது மட்டுமல்லாது சாய்ந்தமருது வைத்தியசாலைக்கும் மதியம் ஒரு வேலை சென்று பாருங்கோ. உண்மை புரியும்.
Reply : 0 0
Riyas Wednesday, 21 March 2012 09:39 PM
சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு மட்டுமல்ல சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் திடீர் விஜயம் செய்து பாருங்க sir.
Reply : 0 0
Rahman Thursday, 22 March 2012 05:48 AM
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியை சந்திக்கணும் எண்டால் PHI மாரிடம் permission எடுக்கணுமாம், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்குகின்ற திரிபோசா பக்கற்றுகள் இங்கு மட்டும் வருவதில்லையாம் எண்டு அதிகாரிகள் சொல்றாங்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களே இது உண்மையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago