2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரண்டாவது சுற்றுலா பொலிஸ் தகவல் மையம் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது சுற்றுலா பொலிஸ் தகவல்  மையம் மட்டக்களப்பில்  பாசிக்குடாவிலும்  திருகோணமலையில் நிலாவெளியிலும்  அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பிரதேசம் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை  அதிகம் கவர்ந்துள்ளதனாலும் கூடுதலான உல்லாசப் பயணிகள் அறுகம்பை, உல்லை, யால போன்ற பிரதேசங்களுக்கு வருவதனாலும் பொத்துவிலில் முதலாவது சுற்றுலா பொலிஸ் தகவல்  மையம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே பாசிக்குடாவும் நிலாவெளியும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை  அதிகளவு கவர்வதால் இப்பிரதேசங்களில் இரண்டாவது சுற்றுலா பொலிஸ் தகவல்  மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .