2025 ஜூன் 26, வியாழக்கிழமை

க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சை; அக்கரைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

2010ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராரப்பத்திர சாதாரணதர பரீட்சை முடிவு அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில்     அக்கரைப்பற்று கல்வி வலயம் முதலாம் இடத்தை பெற்றுள்ளதாக  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்,ரி.போல் அறிவித்துள்ளார்.

சித்தியடைந்த மாணவர்களின் விகிதாசாரத்தின்படி, இம்மாகாணத்தில் இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு மத்திய கல்வி வலயமும் மூன்றாம் இடத்தை கல்முனை கல்வி வலயமும் நான்காம் இடத்தை திருக்கோவில் கல்வி வலயமும் எட்டாவது இடத்தை சம்மாந்துறை கல்வி  வலயமும்  பெற்றுள்ளன.

விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களில் மாகாணத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் முறையே மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய வலயங்கள் பெற்றுள்ளன

இதேவேளை, 2010ஆம் ஆண்டின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் அடிப்படையில் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவர்களை குறைந்தளவு கொண்ட வலயமாக திருக்கோவில் கல்வி வலயமும் கூடியளவு மாணவர்களைக் கொண்ட வலயமாக அம்பாறை வலயமும் காணப்படுகின்றன.

கிழக்கு மாகணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் இருந்து 21,084 மாணவர்கள் மேற்படி பரீட்சைக்குத் தோற்றியபோதும் 1,285 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதுடன் 10,239 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தகுதியடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Najath Thursday, 22 March 2012 01:41 AM

    இவ்வளவு விரைவாக ஆராய்ச்சி முடிவை வெளியிட்டதற்காக நோபல் பரிசு வழங்கலாம்.

    Reply : 0       0

    pasha Thursday, 22 March 2012 03:27 PM

    இதை போன்று உயர் தர பரீட்சை பெறுபேறுகளையும் ஆராய்ந்து தகவல் சொன்னால் நன்றாக இருக்கும்.

    Reply : 0       0

    mv.jasna Friday, 23 March 2012 12:51 PM

    இவ்வாறான தகவல்கள் மிகவும் பிரயோசனம் வாய்ந்தவை.. உயர் தரம் ,புலமை பரிஸில் என்பவைகளுகும் சொன்னால் சந்தோசம் ....நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .