2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}




(ஹனீக் அஹமட்)


நிந்தவூர் அல் மதீனா வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தமது பாடசாலை வளாகத்துக்குள் சுனாமி காலத்தின்போது தற்காலிகமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அல் அதான் பாடசாலையினர், தற்போது தமது பாடசாலையின் நிலத்தினை உரிமைப்படுத்துவதற்கு எடுத்து வரும் நடவடிக்கையினைக் கண்டித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அல் மதீனா பாடசாலை வளாகத்தினுள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாடசாலையின் பழைய மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

இவ் விடயம் குறித்து அல் மதீனா பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் கூறுகையில்,

'அல் அதான் எனும் பாடசாலையானது சுனாமியின் போது அழிவடைந்தது. இதனால், அந்தப்  பாடசாலையினை தற்காலிகமாக இயங்குவதற்கு எமது அல் மதீனா பாடசாலை வளாகத்தில் அனுமதித்தோம்.

ஆனால், தற்போது தற்காலிகமாக வந்த அல் அதான் பாடசாலையினர் எமது பாடசாலைக்கான நிலத்தை சொந்தம் கொண்டாடுவதோடு, சட்ட ரீதியாகவும் அதைப் பதிந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில், எமது அல் மதீனா பாடசாலையானது ஆயிரம் பாடசாலைத் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே, பாரிய கட்டிடங்களும் ஏனைய வழங்களும் எமது பாடசாலைக்குக் கிடைப்பதற்கானதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த வளங்களினைப் பெற்றுக் கொள்வதற்கு எமது பாடசாலை விசாலமானதொரு நிலப்பரப்பினைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

ஆனால், தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதித்த அல் அதான் பாடசாலையினர் இன்று எமது அல் மதீனா பாடசாலையின் நிலத்தினை அபகரிக்க முற்படுவதன் மூலம், எமது பாடசாலைக்குக் கிடைக்கவுள்ள பாரிய அபிவிருத்திகளை இல்லாமல் செய்கின்றனர்' என்றார்.

இதேவேளை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. தௌபீக் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் குறித்த பாடசாலைக்குச் சமூகமளித்ததோடு, அவசர கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.







You May Also Like

  Comments - 0

  • ishaq Thursday, 22 March 2012 09:21 PM

    மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் இறக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.
    எவ்வகையான பிரச்சினையாகிலும் நிருவாகம் முன்னின்று தீர்த்துவைக்க வேண்டும்
    இவ்விடயங்களில் (ஆர்ப்பாட்டம்) பெற்றார், பாதுகாவலர், அபிவிருத்திக்குழு என்பன கடின போக்கினைக் மேற்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
    பாடசாலை எவ்வளவு பெரிது என்பது ஒரு விடயமல்ல அது எதை சாதிக்கிறது என்பதே தேவை.

    நானும் பழைய மாணவன்தான்.
    எனது பாடசாலை மீண்டும் கல்வியில் பல சாதனைகள் புரிய வேண்டும்
    பல ஆர்ப்பாட்டங்களை அல்ல.

    Reply : 0       0

    moha Thursday, 22 March 2012 10:03 PM

    இது ஆசிரியர், அபிவிருத்திக் குழுக்களால் சுமுகமாக தீர்க்க வேண்டிய விடயம்.
    பாடசாலை மாணவர்களுக்கு ஆர்பாட்டம் நடத்தவும் படிப்பிக்கினம். வாழ்க!

    Reply : 0       0

    HJM.Inham Friday, 23 March 2012 05:19 AM

    இது முறையானதல்ல சமாதனமான தீர்வுகளுக்கும், மனித ஒற்றுமைக்கும் வித்திட்டு பண்பாட்டினைக்
    கற்றுக்கொடுக்கவேண்டிய பாடசாலை வளாகம் தீவிரவாத தூண்டுதலுக்கு இடமளிக்க கூடாது. மானவர்களின் மனங்களில் அமைதியினை நிரந்தரப்படுத்தி வைத்திருந்தால் தான் அவர்களால்
    முறையாக கற்கமுடியும் பொற்றோர்கள் இவ்வாற போராட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுமதிக்க கூடாது.

    Reply : 0       0

    Noushard Friday, 23 March 2012 05:25 AM

    சகோதரர்களே, இந்தப் பிள்ளைகளின் போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ இல்லை என்றால் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் எண்டு நினைக்கிங்களா ? பொருத்தமான போராட்டமும் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியம் இல்லையா?

    Reply : 0       0

    ar Friday, 23 March 2012 06:40 PM

    இதல்லாம் தேவையா மானவர்களுக்கு

    Reply : 0       0

    samalfasi Saturday, 24 March 2012 06:18 AM

    ஒரு சில விடயம்களில் யார், எப்படி சொன்னா எடுபடுமோ அவர்கள் அப்படியே சொல்லவேணும். மாணவர்கள் இப்படி செய்ததால் தான் இந்த விடயம் இப்படி pesapaduthu ellaya? சிலநேரம் நாற்காலி பேச்சுற்கு பெறுமதி குறைவாக மதிக்கப்படும், so, அது விளம்பர படுத்தும் போதுதான் உரியவர்கள் அக்கறை கொள்ள தூண்ட படுவர். அத்தோடு இந்த சந்தர்பம் மாணவர்களுக்கும் பாடசாலை padru வளரும் , மட்டுமல்ல - எந்த பாடசாலை பல விளையாட்டு வீரர்களை உருவாகியது யாவரும் அறிந்ததே..சந்தர்ப்பத்தை விட்டால், இனி இதுமாதிரி.

    Reply : 0       0

    samalfasi Saturday, 24 March 2012 06:23 AM

    சாதனையாளர்களை, எப்படி , எங்கே பயிற்று விப்பது,??

    Reply : 0       0

    K.Naseem Saturday, 24 March 2012 07:46 PM

    நானும் பழைய மாணவன்தான்.
    எனது பாடசாலை மீண்டும் கல்வியில் பல சாதனைகள் புரிய வேண்டும்.
    பல ஆர்ப்பாட்டங்களை அல்ல.

    Reply : 0       0

    samalfasi Sunday, 25 March 2012 12:14 AM

    மாணவர்களுக்கு பிரைசினை இருந்த எப்படிங்க சாதனைகள் புரிய முடியும்.. எப்படி மாணவர்களை வீதியில் இறங்கி தமது உரிமைய கேக்குற அளவுக்கு நிலைமைய உருவாக்கி விட்டால் ... நீங்களும் பழைய மாணவர் என்றால், உங்களுக்கு எது முடியுமோ அந்த நன்மைய செய்யுங்க...< கே. நசீம் சார் .>

    Reply : 0       0

    hilmy. Sunday, 25 March 2012 12:44 AM

    மாணவர்கள் பிழையாக வழிகாட்டப்பட்டுள்ளனர்.

    Reply : 0       0

    hilmy. Sunday, 25 March 2012 12:46 AM

    மாணவர்கள் பிழையாக வழிகாட்டப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.


    Reply : 0       0

    ishaq Sunday, 25 March 2012 03:10 AM

    ஐயா, இந்தப் 10/12 வயது மாணவர்கள் இது அவர்களுடைய பிரச்சினை என்று உங்களிடம் வந்து போராட வேண்டும் கொடி பிடிக்க வேண்டும் என்று கேட்டார்களா? இவர்களை வழி நடத்தியது யார்? சும்மா விடுங்க ஐயா, உரிமை பற்றி பேசிறீங்க முதலில் அவங்களுக்கு உரிமை கடமைகளை படிச்சு கொடுங்க.

    Reply : 0       0

    அகரையூரான் Sunday, 25 March 2012 06:18 PM

    இது ஒரு தவறான முன்னுதாரணம். எந்தப் பாடசாலை என்றாலும் பயன் பெறுவது மாணவர்களே. நிர்வாக பிரச்சினைகளுக்குள் மாணவர்களை உள்ளீர்ப்பது முட்டாள்தனம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .