2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறையில் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்'

Suganthini Ratnam   / 2012 மார்ச் 23 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா,ஹனீக் அஹமட்.அப்துல் அஸீஸ், எஸ்.ஆர்.அஹமட் ,எஸ்.மாறன்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்' அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

'ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்' நிகழ்வு சம்மாந்துறை – 02 இலுள்ள தைக்காபள்ளிவாசலில் அப்பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்(ஐ.பி), பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், ஜனாதிபதி இணைப்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கல்முனையில் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வினால் இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் அப்பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் அட்டாளைச்சேன 06ஆம் பிரிவிலும் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் 08ஆம் பிரிவிலும் தமது வேலைத்திட்டங்களை இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வு மருதமுனை 3ஆம் பிரிவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலி தலைமையில் இடம்பெற்றது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .