2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மோசடிசெய்த பணத்தை மீளச் செலுத்திய வைத்தியர்

A.P.Mathan   / 2012 மார்ச் 25 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினூடாக - அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரொருவர் மோசடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு தொகைப் பணத்தினை குறித்த அத்தியட்சகர் மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

மேற்படி வைத்திய அத்தியட்சர் - உண்மைக்குப் புறம்பான வகையில் சுமார் 10 லட்சம் ரூபாவினை வைத்தியசாலையினூடாக கடந்த காலங்களில் பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது.

மேற்படி பண மோசடி தொடர்பாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கென சுகாதார அமைச்சினூடாகப் பெறப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படாமல் மோசடியாக வெளியாருக்கு விற்கப்பட்டமை தொடர்பிலும் ஜனாதிபதிப் புலனாய்வுப் பிரிவினர் அண்மைக் காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையிலேயே, தான் - மோசடியாகப் பெற்றுக் கொண்ட பணத்தொகையான 09 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாவினை குறித்த வைத்திய அத்தியட்சகர் மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கென சுகாதார அமைச்சினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படாமல் வெளியாருக்கு விற்கப்பட்டமை தொடர்பில் - ஜனாதிபதிப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதையடுத்து, தற்போது – குறித்த மருத்துவ உபகரணங்களுக்குப் பதிலீடாக, மிகவும் தரக்குறைவான சில மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது!

தொடர்பான செய்தி:
http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/36756-2012-02-29-09-14-39.html

You May Also Like

  Comments - 0

  • meenavan Sunday, 25 March 2012 03:31 PM

    பின்னணியில் உள்ள சுறாக்கள் தப்பிக்கொள்ள வைத்திய அத்தியட்சகர் சிக்கிக்கொண்டுள்ளார், வண்டில் பாரம் கடையாணியை (அச்சாணி) தாக்குவது நிஜம் தானே?

    Reply : 0       0

    ummpa Sunday, 25 March 2012 07:50 PM

    சனாதிபதி அவர்களே ! இப்படியான சுறாக்களின் அனுமதிப்பத்திரம் மீளப்பெறவேண்டும். ஏனைய சம்பந்தப்பட அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவேண்டும். இதற்கு முழுஅளவில் மக்கள் தங்கள் கருத்துக்களை உரியவர்களிடம் சமர்பிக்கவும்.

    Reply : 0       0

    pothu mahan Sunday, 25 March 2012 09:23 PM

    இவர்கள் எல்லோரையும் கண்டு பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

    Reply : 0       0

    ashraff Monday, 26 March 2012 03:04 PM

    பெறுமதிமிக்க மனித உயிர்களை காக்குமிடம் வைத்தியசாலை என்றால் அது மிகையல்ல. அவ்வாறான மதிப்புக்குரிய இடத்திலும் கூட ஊழல் செய்பவர்கள், மனிதாபிமானம் இல்லாத அரக்கர்கள்.

    Reply : 0       0

    pasha Monday, 26 March 2012 03:46 PM

    இவர்களது பெயர்களை வெளியிட்டு அம்பலப்படுத்தினால் இது போன்ற காரியம் செய்ய இருக்கும் நபர்களுக்கு ஒரு படிப்பினையாய் இருக்கும்

    Reply : 0       0

    prgfox Monday, 26 March 2012 08:18 PM

    யாரந்த சுறா...அதன் பெயர போடுங்கப்பா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .