2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வயல் காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு, முகாம்கடை வயல் காணியொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று திங்கட்கிழமை மாலை மீட்டதாக தமண பொலிஸார் தெரிவித்தனர். சிறுபோக வேளாண்மை நடவடிக்கைக்காக வயலை உழுதுகொண்டிருந்த போது மேற்படி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்ப டிகைக்குண்டினை மீட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .