2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேசசபை தாக்கப்பட்டமை திட்டமிட்ட சதி: எஸ்.லாபீர்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசபைக்குள் புகுந்து சிலர் தாக்கியதாக வெளிவந்த செய்தி மிகவும் திட்டமிட்டு திரிவுபடுத்தப்பட்ட செய்தியாகும் என தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தவிசாளர் எஸ்.லாபீர் - தமிழ்மிரரைத் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசசபைத் தாக்குதல் சம்பவத்தில் தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தவிசாளர் லாபீருக்கும் தொடர்பு இருந்ததாக முன்னர் செய்தி வெளிவந்தது. அவரது சீபி ஜீஆர் 2030 என்ற இலக்கத்தினையுடைய எனது காரில் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இது தொடர்பாக தனது மறுப்பினை தெரிவிக்கும்போதே லாபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தவிசாளர் லாபீர் கூறுகையில்:

கடந்த 26ஆம் திகதி மாலை 7 மணியளவில் எனது நண்பர்கள் இருவருடன் சீபி ஜீஆர் 2030 என்ற இலக்கத்தினையுடைய எனது காரில் அவசர வேலை நிமிர்த்தமாக கொழும்பிற்கு சென்றிருந்தேன். போகும் வழியில் தனிப்பட்ட வேலை காரணமாக குருணாகலில் வக்கீல் ஒருவரைச் சந்தித்துவிட்டு 27ஆம் திகதி மதியம் கொழும்புக்கு சென்றேன். அன்று 3 மணியளவில் ராஜகிரியவிற்கு சென்று பின்னர் எனது வாகனத்தின் பதிவு தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கும் சென்று அங்கு அந்த வேலைகளை முடித்துக்கொண்டு இரவு எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். மறுநாள் 28ஆம் திகதி காலையில் வெள்ளவத்தையிலுள்ள வங்கியொன்றில் காசோலை வைப்பிலிட்டுவிட்டு வரும்போது ஒரு லட்சம் பணம் காணாமற் போய்விட்டது. இவ்விடயம் தொடர்பாக மதியம் கொம்பனிவீதி பொலில் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளேன்.

இப்படியிருக்கும்போதுதான் அக்கரைப்பற்று பிரதேசசபை தாக்கப்பட்டமை தொடர்பில் என்னை சம்மந்தப்படுத்தி, எனது குறித்த வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருப்பதாக ஊரிலிருந்து எனது மனைவி தொலைபேசியில் தெரிவித்தார். எனவே உடனடியாக இவ்விடயம் சம்பந்தமாக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் தற்பாதுகாப்பு முறைப்பாடு ஒன்றினையும் செய்துவிட்டு பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கும் சென்று விபரத்தினை எடுத்துக் கூறினேன். நான் கொழும்பில் இருக்கும்போது என்னுடைய பெயரினை அனாவசியமாக அக்கரைப்பற்று சம்பவத்துடன் தொடர்புபடுத்துகின்றமை தொடர்பில் பொலிமா அதிபரின் காரியாலயத்திலுள்ளவர்கள் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தெரிவித்தனர். நிலைமையை தௌவுபடுத்தியதன் பின்னர் 29ஆம் திகதி மாலை அக்கரைப்பற்றுக்கு சென்றேன்.

எனவே அக்கரைப்பற்று பிரதேசசபை தாக்கப்பட்டமையானது ஜோடிக்கப்பட்ட ஒரு சம்பவம் என்பது நிரூபனமாகிறது. சீபி ஜீஆர் 2030 என்ற இலக்கத்தினையுடைய எனது காரில் சென்று தாக்குதல் நடந்ததாக குறிப்பிட்டார்கள். ஆனால் குறித்த கார் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே கொழும்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. என்மீது வேண்டுமென்றே பழிசுமத்தும் நடவடிக்கையாகவே நான் இதனைப் பார்க்கிறேன். எனக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் முறைப்பாடு செய்யவில்லை. சம்பவம் நடந்தபொழுது அனைவரும் வெளியில் சென்றிருந்ததாக விசாரணைகளின்போது அவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியென்றால் இச்சம்பம் ஒரு திட்டமிட்ட செயல்தானே? பிரதேசசபை உறுப்பினர்களையும் அங்கு கடமை செய்யும் ஊழியர்களையும் முறைப்படி விசாரணைக்கு உட்படுத்தினால் இச்சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய முழு தகவலும் வெளிவரும் என நம்புகிறேன்.

மக்கள் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

பொய்யான குற்றச்சாட்டு மூலம் அரசியலிலிருந்து ஓரங்கட்ட முயற்சி: அக்கரைப்பற்று பிரதேச சபை உதவி தவிசாளர்

'இணைப்புச் செயலாளரின் கார் தாக்கப்பட்டமைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டமைக்கும் தொடர்பில்லை'

தவிசாளர்
அக்கரைப்பற்று பிரதேச சபையில் தளபாடங்கள், கணினிகளை சேதப்படுத்தியதாக பிரதி தவிசாளர் மீது குற்றச்சாட்டு

You May Also Like

  Comments - 0

  • rock Tuesday, 03 April 2012 05:08 AM

    அக்கரைப்பற்று பிரதேச சபை வெகு விரைவில் இலங்கையின் அதிசயமாக மாறும்.

    Reply : 0       0

    Asees Wednesday, 04 April 2012 06:47 PM

    லாபீர் இந்த அறிக்கையை நீங்கள் புகழுக்காகக் கொடுத்தீர்களா? அல்லது உண்மையை நிரூபிக்கக் கொடுத்தீர்களா? அப்படியென்றால், ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உங்களுடைய அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம்.

    Reply : 0       0

    Kaleel Wednesday, 04 April 2012 02:22 PM

    லாபீர், இப்போ நீங்க எந்தெந்த அமைச்சர்களோட இணைப்பாளராக இருக்கிறீங்க?

    உங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறீங்கள். சந்தோசம். இதுபோல் ஏனையவைகளுக்கும் ஊடகங்கள் ஊடாக விளக்கம் தருவீங்களா?

    Reply : 0       0

    abdullah` Tuesday, 03 April 2012 10:45 PM

    மக்களுக்கு எப்பதான் விடிவுகாலம் வரப்போகிறது இறைவா?

    Reply : 0       0

    abdul Tuesday, 03 April 2012 10:29 PM

    லாபிருடைய புகைப்படத்தை ஊடாக வெளிப்படுத்தியமைக்கு மக்கள் சார்பில் நன்றிகள்.

    Reply : 0       0

    Iqbal Tuesday, 03 April 2012 06:38 PM

    லாபீர், அப்போ நீங்க நல்லவரா????

    Reply : 0       0

    ziya Tuesday, 03 April 2012 03:41 PM

    இவருக்கு யார் இந்த பதவியை வழங்கியது ........ அரச அமைச்சரர்களா, .... அல்லது தானாக சூட்டியதா தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தவிசாளர் ம் ம்? ஊடகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 03 April 2012 02:22 PM

    ஹி ஹி ஹி ஹி எலியும் ஓடுது என்று குட்டி பூனையும் ஓடினதாம்.

    Reply : 0       0

    abdul Tuesday, 03 April 2012 06:31 AM

    தம்பி லாபீரைப்பத்தி அக்கரைப்பத்து மடக்களப்பு திருகோணமலை குருநாகல் ஆகிய பெலிஸ் நிலையங்கள் அரசியல்வாதிகள் பள்ளிக்குடிருப்பு மக்கள் எல்லாருக்கிட்டயும் விசாரியுங்கள். நல்லா புகழுவாங்க.

    Reply : 0       0

    Asees Tuesday, 03 April 2012 01:07 AM

    ஐயோ... ஐயோ.... யார் யார் அறிக்கை விடணும் என்று ஒரு விவஸ்தையில்லை.....

    Reply : 0       0

    ilayavan Tuesday, 03 April 2012 04:02 AM

    en iniya nanpar lafeer thanathu peyarukku ulla mariyathai enne enpathai oorukkum thanathu uravukalukkum theriyapaduthiullar

    Reply : 0       0

    krish Tuesday, 03 April 2012 03:16 AM

    yaar ethu sonnalum unmai orunaal velivarum.
    appothu therium yaar paavi,yaar appavi enru.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 03 April 2012 03:12 AM

    இப்ப எந்த அமைச்சருக்கு செயலாளரோ தெரியல

    Reply : 0       0

    min from qatar Tuesday, 03 April 2012 01:14 AM

    ஆயிரம் இருந்தாலும் அக்கரைப்பற்று அல்லவா !!!!!!!!!

    Reply : 0       0

    Kaleel Tuesday, 03 April 2012 01:12 AM

    மிஸ்டர் லாபீர் பொய் சொல்ல மாட்டார். அக்கரைப்பற்றில் அவரைப் பற்றி விசாரித்தால் தெரியும். ஜென்டில்மேன். அக்கரைப்பற்றுப் பொலிஸில் இவரைப் பற்றி மருந்துக்குக் கூட முறைப்பாடுகள் கிடையாது. நம்புங்கோப்பா!!

    Reply : 0       0

    அக்கரைப்பற்றான் Tuesday, 03 April 2012 01:10 AM

    பருந்துகள் உயரப் பறக்குதென்டு, ஊர்க்குருவியும் வந்துட்டு போல!

    Reply : 0       0

    Mimvar Tuesday, 03 April 2012 01:09 AM

    பிரதேச சபையின் சொத்துக்களை சேதமாக்குவதும் பாவம்தான்.... பொதுமக்களின் காணிகளை அச்சுறுத்தி அபகரிப்பதும் பாவம்தான் அல்லவா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .