2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட் தாய்சேய் பராமரிப்பு சுகாதார நிலையங்கள் மக்களிடம் கையளிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}




(அப்துல் அஸீஸ்)


பெரியநீலாவணை மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரு தாய்சேய் பராமரிப்பு சுகாதார நிலையங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. 

தாய், சேய் வைத்திய அதிகாரியும், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்  மர்சூக், கல்முனை மாநகர சபை
உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், உமர்அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

18 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்படி நிலையங்கள் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0

  • M.H.M.KA Friday, 06 April 2012 08:36 PM

    வாழ்த்துக்கள் நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .