2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெளிநாட்டு சாரணர் குழுவினர் - அக்கரைப்பற்று, கல்முனை உதவி மாவட்ட சாரணர்கள் சந்திப்பு

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

தம்புள்ளை, கந்தானையில் நடைபெற்று வரும் 29ஆவது சர்வதேச சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் சவூதி அரேபிய மற்றும் மாலைதீவு சாரணர் குழுவினர்களுக்கும் அக்கரைப்பற்று – கல்முனை உதவி மாவட்ட ஆணையாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

மேற்படி அக்கரைப்பற்று - கல்முனை உதவி மாவட்ட ஆணையாளர் குழுவுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், உதவி மாவட்ட ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தலைமை தாங்கினார்.

இதன்போது, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட உதவி ஆணையாளர்கள் குழுவினருக்கு சவூதி அரேபிய சாரணர் குழுவினர் நினைவு பரிசுகளை வழங்கினர்.

இக்குழுவில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர்களான எம்.ஐ.எம். முஸ்தபா, கே.எம்.தமீம் மற்றும் எம்.எப்.றிபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்டத்திலிருந்து நான்கு பாடசாலைகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படி ஜம்போறியில் பங்குபற்றி வருவதாக உதவி மாவட்ட ஆணையாளர் முனாஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் மாவட்டத்தை சேரந்த நிந்தவூர் - அல் அஷ்ரக் வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று அஷ் - சிராஜ் வித்தியாலயம் மற்றும் மருதமுனை - அல் - மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்தே இம்மாணவர்கள் மேற்படி சாரணர் ஜம்போறியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த சர்வதேச சாரணர் ஜம்போறியில் 23 வெளிநாடுகளைச் சேர்ந்த 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணர்கள் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • நண்பன் Friday, 06 April 2012 02:55 PM

    வாழ்த்துக்கள். சாரணர்கள் சேர்ந்து நாட்டில் சமாதானத்தை கொண்டு வரட்டும்.

    Reply : 0       0

    சம்ஸ் Friday, 06 April 2012 02:56 PM

    சாரணியம் என்பது கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இதனை ஒருங்கிணைத்து செயல்படும் மனிதன் நிச்சயம் வெற்றியடைவான்.

    Reply : 0       0

    ரசீன் Friday, 06 April 2012 02:57 PM

    வாழ்த்துக்கள் 23 நாடு என்றால் மற்ற நாடுகளின் புகைப்படம் இல்லையாங்க?

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 08:14 PM

    நன்றி. ஒரு நாள் சாரணன் என்றும் சாரணனே. எவன் ஒருவன் சரணிய கொள்கை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த பன்புடன் வாழ்கிறானோ அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். இதனை 1500 வருடத்துக்கு முதலே இஸ்லாம் அழகாக சொல்லி இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .