2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை பிரதெச செயலகப் பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் மற்றும் கறவைப் பசுக்கள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், உட்பட அமைச்சின் அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்;.

இவ்வைபவத்தில் 76 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • AHAMED JUNAID Sunday, 08 April 2012 01:21 AM

    தேர்தல் ஒன்று நெருங்குகின்றது அதுதான் தலைவர்கள் மக்களை நெருங்குகிறார்கள் போலும். ........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .