2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யானைகளின் அட்டகாசத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராம மக்கள்

Super User   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இஸ்மாயில்புரம், வளத்தாப்பிட்டி மற்றும் புதிய வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களில் யானைகளின் அட்டகாசத்தினால் உடமைகள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமங்களுக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த சில யானைகள் சுமார் 6 வீடுகளின் சுற்றுவெலிகள் உட்பட யிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.

அம்பாறை நகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றை இணைக்கும் எல்லைக் கிராமங்களான  இந்த கிராமங்களில் சுமார் 800 தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட இந்த மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் கூலித் தொழில் ஆகியன காணப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பிரதேச மக்கள் யானை பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Atham manal Tuesday, 10 April 2012 03:39 AM

    மிக விரைவில் இதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
    muolavi K.L.. Atham bawa

    Reply : 0       0

    ABOOL ABDUL RASHEED Wednesday, 11 April 2012 08:21 PM

    This case verry impotent, take a action imediatlly.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .