2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட குழந்தையை தத்துக்கொடுக்க தீர்மானம்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கைவிடப்பட்ட நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள குழந்தையின் உயரிய பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலம் கருதி  இக்குழந்தையை தத்துக்கொடுப்பதற்குத் தாம் தீர்மானித்துள்ளதாக சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கல்முனை அலுவலகப் பொறுப்பாதிகாரி எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

பெண்ணொருவரினால் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்  இக்குழந்தை கல்முனை பொலிஸாரின் உதவியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இக்குழந்தை தொடர்பில் நன்னடத்தைப் பிரிவின் கல்முனை அலுவலகப் பொறுப்பாதிகாரி சிவகுமார் மேலும் கூறுகையில்,

'இக்குழந்தைக்கான உயரிய பாதுகாப்புப் போதாமல் உள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எமக்கு அறிவித்துள்ளார். குழந்தையின் உயரிய பாதுகாப்பு மற்றும் நலன் கருதி  மட்டக்களப்பிலுள்ள சினேகதீபம் குழந்தைகள் தற்காலிக பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க உத்தேசித்துள்ளோம்.

பின்னர் குழந்தையின் நலன் கருதி பராமரிப்புப் பெற்றோரிடம் அனுமதித்து பின்னர் தத்துக்கொடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்' என்றார்.

மேற்படி விடயம் தொடர்பில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவிக்கையில்,

'எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இக்குழந்தை நல்ல தேக ஆரோக்கியத்துடன் உள்ளது. தற்போது வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான 05ஆம் இலக்க விடுதியில்  இக்குழந்தையைப்  பராமரிக்கின்றோம்.

இது தொடர்பில் கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு நாம் அறிவித்த நிலையில் அவர்கள் குழந்தையை பார்வையிட்டனர். இக்குழந்தையை அவர்கள்  குழந்தைகள் தற்காலிக பராமரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாகத் தெரிவித்தனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • pasha Tuesday, 17 April 2012 02:11 PM

    இக்குழந்தையை கைவிட்ட தாய், இந்த செய்தியை அறிந்தால் மகிழ்ச்சி கொள்வாள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .