2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கைவிடப்பட்டிருந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிசு, நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கல்முனை அலுவலக உத்தியோகத்தர்கள் மூலம் இன்று மட்டக்களப்பிலுள்ள தற்காலிக குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதேவேளை, இந்தக் குழந்தை ஓரிரு வாரங்கள் குறித்த பராமரிப்பு நிலையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்ட பின்னர், அதன் உயரிய பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு பொருத்தமானதொரு தம்பதியினருக்குத் தத்துக் கொடுக்கப்படவுள்ளதாக சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கல்முனை அலுவலகப் பொறுப்பதிகாரி எஸ்.சிவகுமார் கூறினார்.

கைவிடப்பட்ட குழந்தை எனக் கூறப்பட்டு, கல்முனை பொலிஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழந்தையொன்று அனுமதிக்கப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .