2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திருடப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்பு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கடலில் தரித்துநின்ற இயந்திரப்படகிலிருந்து திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 18 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்ட அதேவேளை, இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

மாத்தறை மாவட்டத்தின் கந்தரைப் பகுதியில் கன்டர்ரக லொறி ஒன்றில்  இவ்மீன்பிடி வலைகள் ஏற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதுக் கடலில் இயந்திரப்படகு தரித்துநின்றபோது, அப்படகிலிருந்த மீன்பிடி வலைகளை மற்றுமொரு இயந்திரப்படகில் வந்த தென்பகுதியை சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் திருடிச்செல்லப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு  செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிச் சங்கத்தினரும் இணைந்து தென்பகுதி  பொலிஸார் மற்றும்  மீன்பிடி தொடர்பான அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மீன்பிடி வலைகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .