2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அரசாங்கத் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தரகர் வேலையில் ஈடுபட்ட நபர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (எஸ்.மாறன்)

அரசாங்கத் திணைக்களங்களில் தொழில்வாய்ப்பு  பெற்றுத்தருவதாக கூறி தரகர் வேலையில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது,

சம்மாந்துறையைச் சேர்ந்த தரகராகச் செயற்பட்டுவந்த இந்நபர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்களில் தொழில்வாய்ப்பு  பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவிக்கப்படும்  சம்மாந்துறையைச் சேர்ந்த மற்றுமொரு நபருக்கு தரகர் வேலையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில்,  ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களை அரசாங்கத்  திணைக்களங்களில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாக தெரிவிக்கப்படும் மற்றைய நபரிடம் தரகராகச் செயற்படும் இந்நபர்  அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இவ் இளைஞர்களிடமிருந்து அரசாங்கத் திணைக்களங்களில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதற்கான  பணத்தையும் தரகராகச் செயற்படும் இந்நபர் பெற்று மற்றைய நபருக்கு வழங்கியுள்ளார்.

தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவிக்கப்படும் மற்றைய நபர், அரசாங்கத் திணைக்களங்களில் தொழில்வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்காது வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்காது இவ் இளைஞர்களை பல மாதங்களாக ஏமாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் தரகராகச் செயற்படும்  இந்நபர், ஆலையடிவேம்பிலுள்ள இளைஞரொருவருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தரகர் வேலையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது ஏற்கெனவே தொழில்வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள் பொதுமக்களின் உதவியுடன் இவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த  பின்னர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தரகராச் செயற்பட்டுவந்த இந்நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .