2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனையில் சாந்தி ஊர்வலம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் சாந்தி ஊர்வலமொன்று இடம்பெற்றது.

கிழக்கு பிராந்திய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நிலையங்களின் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்முனை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இந் நிகழ்வு காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்றது.

சுவாமி மகா சமாதியடைந்து ஒரு வருடத்தை முன்னிட்டு நேற்று (21.4.2012) நாராயண சேவை (கிராமங்களுக்கு அன்னதானம் வழங்குதல்) இடம்பெற்றதுடன் இன்று சாந்தி ஊர்வலமும் நாளை  வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் சிரமதானமும் நாளை மறுதினம் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அகன்ட பஜனையும் இடம்பெறவுள்ளது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .