2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'இளம் உள்ளங்களுக்கு ஆன்மீக சுகம்' நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இளம் உள்ளங்களுக்கு ஆன்மீக சுகம' என்ற தலைப்பிலான நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 'இளைஞர்களுக்கு, மதங்கள் கூறும் ஆன்மீகமும், சமாதானமும்' என்ற தலைப்பில் நான்கு மத போதகர்களினாலும் ஆத்மீக விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் கே. தவராஜா, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் உட்பட, மதபோதகர்களான கல்முனை சுமத்திரா மகா விகாரதிபதி  ரண்முத்துக்கள சங்கரத்தின தேரோ, கல்முனை சிவன் கோயில் குருக்களான பொன் சுதேந்திரன் குருக்கள், சம்மாந்துறை அரபுக்களாசலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். அமீன், இருதய நாதர் ஆலய பொறுப்பதிகாரி அருட்தந்தை ஜோன்கரி மற்றும் இளைஞர் சேவை மாவட்ட, பிரதேச மட்ட அதிகாரிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள, மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள், அரபு கலாசாலை மாணவாகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .