2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்கள் தொடர்பான விடயத்தினை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் அடைய வேண்டாம்: யூஸூப் முப்தி

Super User   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


முஸ்லிம்கள் தொடர்பான எந்த விடயத்தினையும் வைத்துக்கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் அடைய வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு மாவட்ட கிளை தலைவர் அஷ்ஷெய் யூஸூப் முப்தி தெரிவித்தார்.

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் கலாசாரப் பிரிவின் கீழ் இயங்கும் இஸ்லாமிய ஷரீஆ கற்கை நிலையத்தில் ஆறு வருட கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அஷ்ஷேஹ் எம்.ஐ. ஹஜ்ஜி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய யூஸூப் முப்தி,

"தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து முஸ்லிம் அரசியல்வாதிகளினால்  கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் இலாபத்திற்கhகவாகும். அத்துடன், அவர்கள் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையை இரண்டாக பிரித்துவிட்டோம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

அவர்கள் ஒன்றினை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்  எங்களிடம் ஆயுதம் மற்றும் ஊடகம் இல்லை. ஆனால், அல்லாஹுவின் உதவி இருக்கின்றது. எவரும் உலமாக்களை பற்றி கதைப்பதற்கும் அவர்களின் மானத்திலும் கைவைக்கவும் கூடாது. உலாமாக்கள் கண்ணியத்திற்குரியவர்கள். அது போன்றே உலாமா சபையும்  கண்ணியத்திற்குரியது.

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பந்தமான விடயத்தில்  இந்நாட்டில் 99 சத வீதமான முஸ்லிம்கள்  உலாமாக்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் நோக்குடன் நடந்தார்கள்.  அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தேர்தல்கள் வருகின்ற போது இந்தக் கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும். என கூறியதில்லை. ஆனால், இனி வரும் காலங்களில் இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற அறிக்கையினை வெளியிடவுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற சென்றது அவர்களின் சொந்த விருப்புக்கல்ல. முஸ்லிம்களின் வாக்குகளினாலேயே போயுள்ளீர்கள். அங்கு போய் முஸ்லிம்களைப் பற்றி பேச வேண்டுமே தவிர உங்களைப் பற்றி பேசக்கூடாது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவம் தொடர்பாக முஸ்லிம் மக்கள் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு கட்டுப்பட்டார்கள். எனவே, எமக்கு ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் போது பிரார்த்தனைகள் மூலம் தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அல்குர்ஆன் கூறுகின்றது. அதன்படி அனைவரும் நடந்தகொள்ள வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .