2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல்களுக்கு கதிரைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாளம்பைக்கேணி - 05 கிராம அபிவிருத்திச் சங்கத்தினால், பள்ளிவாசல்களுக்கு கதிரைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

கிராம அபிவிருத்திச் சங்க காரியாலயத்தில்  சங்க தலைவர் எம்.ஐ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான வைபவத்தின்போது,  மஸ்ஜிதுல் தஹ்வதில்ஹக்  பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூறாணியா பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.நஜீப், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நௌஸாத், பள்ளிவாசல் தலைவர்களான ஐ.எல்.முகைதீன்வாவா, எம்.எம்.முஸ்தபாலெப்பை உட்பட கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .