2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளரின் சகோதரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள

Suganthini Ratnam   / 2012 மே 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளரின் இளைய சகோதரரான ஏ.எல்.எம்.நஸீம் என்பவர் மீதே இத்துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் அட்டாளைச்சேனை கோணாவத்தை பாலத்திற்கு அருகில்; தனது காரினை நிறுத்திவிட்டு நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபருடன் மேலும் இவருர் முச்சக்கர வண்டியில் வந்ததாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மார்பில் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .