2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்; துப்பாக்கிதாரிகளின் முச்சக்கரவண்டி கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த  திங்கட்கிழமை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பாலமுனை பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின்  விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளரின் இளைய சகோதரரான ஏ.எல்.எம்.நஸீம் என்பவர் மீதே இத்துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .