2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

Super User   / 2012 மே 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜெ.எம்.ஹனீபா)


சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் மர நடுகை நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஹசரத் எம்.பி.அலியார் தேவ்பந்தி தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர் எம்.எம்.ஏ.காதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு நகர தலைவரும் பத்வாக் குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.யூசூப் முப்தி கலந்துகொண்டார்.

இதன்போது, சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு தொகுதி குர்ஆன்  கிதாபுகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் வழங்கிவைத்ததுடன் சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர் கணனி தொகுதியினையும் இக்கலாசாலையின் பழைய மாணவர் மௌலவி தௌபீக் ஒலிபெருக்கி சாதனத்தொகுதியொன்றையும் வழங்கி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .