2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அபிவிருத்திக்காக தொண்டாற்றியவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் சங்கமன்கண்டி பிள்ளையார்  ஆலயத்தின் அபிவிருத்திக்காக தொண்டாற்றிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கொடைவள்ளல்கள் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை ஆவ் ஆலய நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

ஆலய மண்டபத்தில் ஆலயத் தலைவர் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் புவிராஜன், ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் க.இரத்தினவேல், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் இராசையா,  திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் என்.செந்தீபன் ஆகியோரை  ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .